மலையக வீதிப்பாடல்களைத் தந்த கலைஞர்கள் வரிசையில், கண்டி உக்குவளைத் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றிய காசி ரெங்கநாதன் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. இவர் பாடலாசிரியர், பாடகர், நாடக இயக்குநர், நாடக நடிகர் எனப் பல்துறை ஆளுமையுடன் கலைத்துறையில் முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக, நாடற்றவர்களாக்கப்பட்டமை தொடர்பில் உருக்கமான பல பாடல்களைத் தந்துள்ளார். மலையக வீதிப்பாடலாசிரியர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தவராகவும் அறியப்படுகின்றார். அவற்றில் பெரும்பாலானவை இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. […]