October 2025 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

October 2025 தொடர்கள்

இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: லக்ஸ்மன் மாறசிங்க ‘The Evolution of Constitutional Government in Sri Lanka’ என்னும் நூல் இலங்கையில் அரசியல் யாப்பு ஆளுகையின் (Constitutional Governance) தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சியும் பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நூலாகும். இந்நூலை சட்ட அறிஞரும், பேராசிரியருமான காலம் சென்ற லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்த நூலின் முதலாவது அத்தியாயமான முன்னுரையில் அவர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1950களின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்

25 நிமிட வாசிப்பு

இந்தத் தொடரில் ஆய்வு செய்யப்படும் யாழ்ப்பாணப் பகுதி தொல்லியல் மையங்கள்:    1. கந்தரோடை 2. ஆனைக்கோட்டை 3. யாழ்ப்பாணம் கோட்டை 4. வல்லிபுரம் 5. பூநகரி 6. காரைநகர் 7. வேலணை: அல்லைப்பிட்டி – சாட்டி 9. புங்குடுதீவு 10. நயினாதீவு 11. நெடுந்தீவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிகாலக் குடியிருப்புகள் அமைந்த நிலங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: I. யாழ்ப்பாணத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையிலுள்ள சிறிய தீவுகள். II. […]

மேலும் பார்க்க

அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்த பண்பாட்டு மலர்ச்சி

16 நிமிட வாசிப்பு

விடுதலை இலக்கு இல்லாத தேசியவாதம் பொன்னம்பலம் அருணாசலம் தொடக்கியது அரசியல் தேசியவாதத்தில் (Political Nationalism) அடங்கும். அவர் 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்து, அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் வைத்த இலக்கு அல்லது குறிக்கோள் ஒரு முழுமையான அரசியல் தேசியவாதப் பண்பை வெளிப்படுத்தவில்லை எனலாம். அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாட்டில் எழும் அரசியல் தேசிய இயக்கம் அந்த நாட்டவரின் விடுதலையை இலக்காக வைப்பது அவசியமாகும். […]

மேலும் பார்க்க

நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு

4.1 நிலத்தடி நீர் மேம்பாட்டு மூலோபாயம் நிலத்தடி நீர், பொதுவாக ஆழமற்ற நீர்நிலைகளாகக் (Shallow Aquifers) கிடைக்கிறது. இது உள்நாட்டுப் பயன்பாடு, சிறுதொழில் நோக்கிலான பாசனம், தொழிற்துறை மற்றும் பிற தேவைகளுக்காக, வடமாகாணத்திலும் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்கான ஒரு தயாரான மூலத்தை வழங்குவதற்கு மேலதிகமாக, இந்த ஆழமற்ற நீர்நிலைகள், வற்றாத நீரோட்டக் காலங்களில் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு நீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன; […]

மேலும் பார்க்க

இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் – அரசியல், புவிசார் – வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு

15 நிமிட வாசிப்பு

இதுவரை இங்கு நாம் பேசிவந்த நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான முக்கிய அடிப்படை  இந்து மாகடலின் மையத்தில்  இலங்கை – இந்திய அரசுகள் சார்ந்து அமைந்திருக்கக்கூடிய  புவிசார் – அரசியல்  அமைவிடக் கட்டமைப்பாகும். இந்தவகையில், இலங்கை – இந்திய அரசியலினதும், […]

மேலும் பார்க்க

நாவலப்பிட்டி மண்ணில் உருவான ஆளுமை: எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை

20 நிமிட வாசிப்பு

அறுபதுகளுக்குப் பிந்தைய நாவலப்பிட்டி மண்ணில் உருவான கவிதைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட மலையக வீதிப்பாடல்களை ஆராயும் போது, பெரியாம்பிள்ளை என்ற பெயர் தவிர்க்க முடியாததாகின்றது. எனினும், அவரது எழுச்சிப் பாடல்களில் பல எங்களிடம் இல்லாத நிலை, அவரைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள முடியாமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. அவரை நேரடியாகக் கண்டவர்கள், அவரது உடலியங்குச் சிறப்புகளைப் பற்றி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்