சுன்னத்துக் கலியாணம்
13 நிமிட வாசிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே மிகுந்த மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஒரு வாழ்க்கை நிகழ்வாக சுன்னத்துக்கலியாணம் காணப்படுகிறது. இது வெறும் மருத்துவ நடைமுறையாகவோ சடங்காகவோ மட்டுமல்லாமல்; சமூக அடையாளம், தூய்மை மற்றும் ஆண்கள் பருவத்திற்கு நுழைவதற்கான ஏற்பாட்டு விழாவாகவும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களிடையே இந்த விழா பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள், மரபுகள் மற்றும் சமூகப் பங்கேற்புகளோடு கொண்டாடப்படுகிறது. இக்கட்டுரை ஆரம்பகால […]
மேலும் பார்க்க
கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 2
18 நிமிட வாசிப்பு
காலப்பகுதி II : ஆரம்ப வரலாற்றுக் காலம் 1.நகரமயமாக்கம் கி.மு. 600-300. வரலாற்றுக்கால ஆரம்பம் என்பது ஒரு பிரதேசத்தில் பதிய வைத்திருக்கும் கல்வெட்டுகளிலோ அல்லது வேறு பொருட்களிலோ காணப்படும் வாசிக்கக்கூடிய ஒரு மொழியின் ஆரம்பகாலத்தைக் கொண்டு வரலாற்றாசியர்கள் கொடுக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. அந்தவகையில் கந்தரோடையில் இதுவரை கண்டெடுத்த பானை ஓடுகளில் காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பு, இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டு, அந்த எழுத்துகள் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகத் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – தெல்லிப்பழை
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். தெல்லிப்பழைக் கோவிற்பற்று, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை, வீமன்காமம், கட்டுவன் என ஐந்து துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோவிற்பற்றின் வடக்குக் கரையோரமாகக் மேற்கிலிருந்து கிழக்காகத் தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை […]
மேலும் பார்க்க
1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1
19 நிமிட வாசிப்பு
உதவி : ஜீவராசா டிலக்ஷனா இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் […]
மேலும் பார்க்க
மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 4
10 நிமிட வாசிப்பு
கிழக்கு மாகாணம் இலங்கையின் கிழக்கு மாகாணம், தீவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஓர் அழகான பிரதேசமாகும். இது இயற்கை அழகு, பண்பாட்டு மரபு மற்றும் புவியியல் முக்கியத்துவம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் புவியியல் நிலப்பரப்பு பல்வகைமை கொண்டது. இங்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, அழிந்துபோன மாபெரும் கண்டமான கோண்ட்வானாவின் எச்சங்களைக் காணலாம். கொண்டலைட் மற்றும் சார்னோகைட் போன்ற அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவான பாறைகள் […]
மேலும் பார்க்க
கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1
23 நிமிட வாசிப்பு
“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” Paul E. PierisCeylon Daily News22-02-1919. “பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.” C. […]
மேலும் பார்க்க
போரும் புதிய போக்குகளும்
12 நிமிட வாசிப்பு
முதலாம் உலகப் போர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு […]
மேலும் பார்க்க