May 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

May 2025 தொடர்கள்

ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்:அறிமுகம்                           

17 நிமிட வாசிப்பு | 5369 பார்வைகள்

முன்னுரை தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் இன்றுவரை பதிப்பாசிரியர் பலர் பல்வேறு வகையான பதிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பனவான பல நூல்கள் வெளிவந்தமைக்கு பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணியே காரணம் என்பதை எள்ளளவும் மறுக்க இயலாது. இவ்வாறான பதிப்பாசிரியர்களின் உழைப்பால்தான் பல்வேறு வகையான நூல்களும் இலக்கியங்களும் இன்றைக்கும் நம் கைகளில் தவழுகின்றன. தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் இப்பணியினை மேற்கொள்ளவில்லையெனில் சங்க இலக்கியம், […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும்

11 நிமிட வாசிப்பு | 3237 பார்வைகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களில் மனிதமூலதனத்தையும் நிதிமூலதனத்தையும் அதிக நலிவுக்குள்ளாக்கும் காரணிகளாக சமூகநலத்துறைச் செலவீனங்கள் இருந்து வருகின்றன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியலில் இலவசமாக வழங்குதல் என்பதுவே சுதேசிய அரசுகளின் பொறுப்பு என்ற எண்ணம் வலுப்பெற்றிருந்ததால், மக்களின் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் அரசின் இலவச உதவி வழங்கல் மிக முக்கியமானது எனக் கருதப்பட்டது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு உருவாக்கப்பட்ட சுதேச அரசு, மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நலஅரசு (Welfare […]

மேலும் பார்க்க

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு | 2951 பார்வைகள்

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன 1895 முதல் 1910 வரை தொடர்ந்த அரசியல் மோதல்கள் பழமைவாதிகளுக்கும், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவும், எழுச்சிபெறும் புதிய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து வாதம் செய்வதற்கும் ஆற்றல் உடையவர்களான ஆளுமைமிக்க புதிய தலைவர்கள் பலர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினர். இவர்களில் பெரும்பான்மையினர் உயர்தொழில்களில் சிறப்பெய்தியவர்கள்; சாராயக்குத்தகை முதலாளிகளதும், பெருந்தோட்டங்களினதும், காரீயச் சுரங்கங்களினது முதலாளிகளதும் புத்திரர்களாகவும், மருமக்களாகவும் விளங்கினர். சிலர் […]

மேலும் பார்க்க

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

20 நிமிட வாசிப்பு | 4823 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை […]

மேலும் பார்க்க

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு | 2678 பார்வைகள்

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன காலனித்துவ அரசியலில் வர்க்கமும் சாதியும் (Class and Caste in National Politics) என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘Nobodies to Somebodies: The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 18 ஆவது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும். 1833 முதல் 1948 வரையான காலத்தில் இலங்கையின் தேசிய அரசியலில் வர்க்கம், சாதி என்பனவற்றின் வகிபாகம் பற்றி ஆராயும் இக்கட்டுரையை […]

மேலும் பார்க்க

மறுவாசிப்பில் நாவலர்

20 நிமிட வாசிப்பு | 3965 பார்வைகள்

இன்று நாம் கடந்தவாறிருக்கும் சமூகநியதிகளில் கடந்தகாலத்தின் தாக்கங்கள் உள்ளன. இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைந்தெறிந்து திடமான முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாகச் சில தவறுகள் முன்னரே ஏற்படுத்தப்பட்டவையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. மறுதலையாக, கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரோக்கியமான செயல்முறைகளைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க முனையாமல் திசைமாறிச்சென்ற இடைக்காலத்தின் வரலாற்று ஓட்டம் காரணமாகவும் இன்றைய பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம். இன்றைய வாழ்வியலில் கணிசமான தாக்கத்தை விளைவித்த காலப்பரப்பான நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எமது இருப்பு எவ்வாறு இருந்தது? […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும்: இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 3

24 நிமிட வாசிப்பு | 3497 பார்வைகள்

“இலங்கை இனமுரண்பாட்டில் மேற்கின் சமாதான அணுகுமுறை, பனிப்போர் காலகட்டத்தின் சமாதானத் தலையீடுகளை ஒத்த ஓர் ஊடுருவும் தன்மையின் தொடக்கம் என உணர முடிகிறது. இந்தியா, அதன் தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டினை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னணியில், அடிப்படையாக மாற்றியமைக்கப்பட்ட புவியியல் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்டது. இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் நேரடியாக ஈடுபடுவதை விலக்கிக்கொண்டது. இலங்கையை ஓர் இனத்துவ இணைவாக்கம்கொண்ட சந்தை ஜனநாயகமாக மாற்றும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக […]

மேலும் பார்க்க

இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்: சமூக மாற்றத்துக்கான முன்னோடி அரங்க முயற்சி

26 நிமிட வாசிப்பு | 3172 பார்வைகள்

பெருந்தோட்டங்களின் இருண்ட வாழ்வை வெளியுலகத்துக்கு வெளிச்சமிட்டுக்காட்டி, அவ்வாழ்வு பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நடேசய்யரின் சமூக, அரசியல் இயக்கத்தின் முக்கியமான அங்கங்களுள் ஒன்றாக விளங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளரிடையே சீர்திருத்தச் சிந்தனைகளைப் பரப்பி, அவர்களைச் சமூக, அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்புவதும் இந்திய மக்களிடையே தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்த வாழ்வை எடுத்துரைத்து, இலங்கைக்குத் தொழிலாளர்களாகப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அதன் அடிப்படை நோக்கங்களாக இருந்துள்ளன. மேற்படி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக திட்டமிட்டவகையில் துண்டுப்பிரசுரங்கள், சட்டவழிகாட்டி […]

மேலும் பார்க்க

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 3

18 நிமிட வாசிப்பு | 5824 பார்வைகள்

வடக்கு மாகாண நிலத்தடி நீர் கிடைப்பு மற்றும் தரச்சீர்கேடு நிலத்தடிநீர் என்பது “தரையின் மேற்பரப்பிற்குக் கீழே காணப்படும் அனைத்து நீர்களையும் குறிக்கும் ஒரு சொற்றொடர்”. இது “நிறைந்த மண்டலத்தில் காணப்படும் நீர், கனிமத் துகள்களுக்கு இடையிலான இடைவெளிகளையோ அல்லது கல்லில் உள்ள விரிசல்கள் மற்றும் முறிவுகளையோ நிரப்பும் நீர்” என வரையறுக்கப்படுகிறது. இயற்கையாகவே, மழை மற்றும் பனியிலிருந்து பெறப்படும் நீர் மண்ணின் வாயுக்களிலும் அதற்குக் கீழுள்ள பாறைகளின் இடைவெளிகளிலும் ஊறி, […]

மேலும் பார்க்க

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள்: போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல் – இலங்கை – பகுதி 3

28 நிமிட வாசிப்பு | 4628 பார்வைகள்

ஆங்கில மூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் கூட்டணியைத் தடுக்கும் ஓர் உத்தி மனித உரிமைகள் கவுன்சிலில் எந்த அரசிற்கும் வீட்டோ அதிகாரம் இல்லை. அதன் நாற்பத்தேழு உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையால் மூன்று ஆண்டுகாலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற குழுக்கள் ஏழு இடங்களை மட்டுமே கொண்டுள்ளன. இதன்பொருள், எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அரசுகளின் கூட்டடான ஆதரவைப் பெற்றேயாக வேண்டும் என்பதாகும். இந்த இயக்கவியலைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜபக்சே […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்