கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 7 of 12
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை – நூல் அறிமுகம்

14 நிமிட வாசிப்பு | 14599 பார்வைகள்

‘போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை’ (History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka) என்ற தலைப்பிலான நூலை கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி வெளியிட்டார். இந் நூலை அவர் எழுத முன்னர், ‘போருக்குப் பின் வரலாறு : நல்லிணக்கத்திற்கு எதிரான சவால்’ எனும் கட்டுரையை ground views (groundviews.org) இணைய சஞ்சிகையில் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 2

16 நிமிட வாசிப்பு | 9828 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜோர்ஜ் மத்தியு அண்மைக்கால அரசியல் இயங்கியலும் போக்குகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்மையும் பேணுதல் முதன்மையான பணியாக இருந்தது. இந்திய அரசியல் யாப்பு இந்திய ஐக்கியத்திற்கான ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான நிர்வாகத்தை செயற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நிர்வாகம், தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்கள் ஊடாக நடத்தப்படுதல் வேண்டும். இந்நிறுவனங்கள் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு | 10257 பார்வைகள்

ஆங்கில மூலம்: ஜோர்ஜ் மத்தியு சமஷ்டி முறையின் வரலாறும் வளர்ச்சியும் இந்தியா 3.287 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உடைய நாடு. இங்கு 1.098 பில்லியன் மக்கள் (2002) வாழ்கிறார்கள். இனத்துவ பன்மைத்துவமுடைய இப் பரந்த தேசத்தில் பல்வேறு இனத்துவக் குழுமங்களும், மொழிகளும், பண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்தியாவில் 28 மாநில அரசுகளும் 7 ஒன்றியப் பிரதேசங்களும் (Union Territories) உள்ளன (2002). ஒன்றியப் பிரதேசம் என்பதில் தேசியத் தலைநகரான […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு | 11310 பார்வைகள்

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன 1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 10192 பார்வைகள்

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்பான அசமத்துவம், இந்திய சமஷ்டியின் நான்காவது அசமத்துவம் எனலாம் (உறுப்புரை 370, 371 A, 371 G). இவற்றுள் ஜம்மு காஷ்மீர் ஆகக்கூடிய அசமத்துவம் கொண்ட பகுதியாக இருந்து வந்துள்ளது (அண்மையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – மொ-ர்). இந்தியாவின் அரசியல் யாப்பின் உறுப்புரை 370 ‘தற்காலிக ஏற்பாடுகள்’ (Temporary Provisions) எனக் […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு | 12948 பார்வைகள்

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன ஜேம்ஸ் மனர் (James Manor) என்னும் பிரித்தானியரான அரசியல், வரலாற்று அறிஞர் ‘The Expedient utopian: Bandaranaike and Ceylon’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை காலம் சென்ற அறிஞர் றெஜி சிறிவர்த்தன எழுதினார். அவரது கட்டுரை ‘Thatched Patio’ என்ற ஆங்கில சஞ்சிகையில் 1990 ஜனவரி-பெப்ரவரி இதழில் பிரசுரமானது. அக் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பை இங்கே […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு | 17459 பார்வைகள்

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டும் இந்திய அரசியல் முறைமையின் அடிப்படையான கூறுகளாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இத் தத்துவங்களில் பாராளுமன்ற முறை (PARLIAMENTARISM ), பாராளுமன்றத்தின் அதியுயர் அதிகாரத்தை வலியுறுத்துவது. சமஷ்டி (FEDERALISM), அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முதன்மைப்படுத்துவது. இவ்வாறாக மத்தியப்படுத்திய பாராளுமன்ற அதிகாரமும் அதிகாரப் பரவலாக்கமும் என்ற இரண்டு கூறுகளும் ஒன்றிணைந்து இருத்தல் இந்தியாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க

அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி

16 நிமிட வாசிப்பு | 18252 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் அரசனைப் பற்றி ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீபவம்சம்’ என்னும் பாளி நூல் “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல் அறவழி நின்று செங்கோல் ஓச்சினான்” என்று புகழ்ந்துரைக்கிறது. அம் மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு, மன்னன் எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தில் […]

மேலும் பார்க்க

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 8892 பார்வைகள்

ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) அசமத்துவம் சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு அசமத்துவ கட்டமைப்பை (சில கன்டன்களுக்கு கூடிய சுயாட்சியும் வேறு சிலவற்றுக்கு குறைந்த சுயாட்சியும்) உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டதன்று. ஆயினும் அச் சமஷ்டிச் செயற்பாட்டின் ஊடாக அசமத்துவ அம்சங்கள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது? கன்டன்கள் மிகுந்த சுயாட்சி உரிமையுடையவையாதலால் தமது நிறுவனங்களை தாமே சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்கின்றன. இவ்வாறான சுதந்திரம் கன்டன்களுக்கிடையே அசமத்துவத்தை […]

மேலும் பார்க்க

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையாவின் தேரவாத பௌத்தம் குறித்த ஆய்வுகள்

20 நிமிட வாசிப்பு | 10998 பார்வைகள்

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையில் பிறந்தவரான தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகம், கொர்ணல், ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராக 1960 களில் கடமையாற்றினர். 1980 – 83 காலப்பகுதியில் ‘யுனெஸ்கோ’விலும் அதன் பின்னர் கேம்பிரிட்ஜ், சிக்காக்கோ, ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கடமையாற்றினார். உலக அளவில் செல்வாக்குள்ள கோட்பாட்டாளரும் தேரவாத பௌத்தம் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்