ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந் நீண்டகால எல்லையுள் இம்முறையின் கீழ் நடந்தேறிய அனைத்து ஜனநாயக விரோதச் (Un – Democratic) செயற்பாடுகளையும் மூன்று கருத்தியல்களின் (Ideologies) துணையுடன் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றோம். முதலாவதான பெரும்பான்மைவாதம் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கான அரசியல் நிறுவனங்களை (Political Institutions) கட்டமைத்து அவற்றைப் […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் என்னும் விடயம் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இம் முறையை நீக்கி பாராளுமன்ற முறைக்கு (Parliamentary System) மீண்டும் திரும்புவதற்கான சாதக நிலையை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது. இப் பின்புலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சன நோக்கிலான ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் […]
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் ‘சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பீடு செய்தல்’ (COMPARING FEDERAL SYSTEMS) என்னும் ஆய்வு நூலினை றொனால்ட் எல். வாட்ஸ் என்னும் அறிஞர் எழுதியுள்ளார். இந்நூலினைக் கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டது. இதன் முதற்பதிப்பு 1997 இலும் இரண்டாம் பதிப்பு 1999 ஆம் ஆண்டிலும் வெளியாயின. இந்நூலில் 6 முதல் 14 வரையுள்ள பக்கங்களில் ‘சமஷ்டி குறித்த சொற்களின் வரைவிலக்கணங்களும் சமஷ்டித் தத்துவங்களும்’ (DEFINITION […]
(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.) இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், […]
மானிடவியலாளர் பேரின்பநாயகத்தின் கட்டுரை ‘CASTE, RELIGION AND RITUAL IN CEYLON’ என்ற தலைப்பில் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெறுகிறது. இக் கட்டுரையினை பேரின்பநாயகம் 1965 ஆம் ஆண்டில் எழுதினார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்தபின் இக்கட்டுரை தமிழாக்கம் மூலமாக தமிழ் அறிவுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றி ‘THE KARMIC […]
பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியக் காலனிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி உறவுகள் தொடர்பாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்வதாக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி என்ற குறுகிய கால எல்லையை தமது ஆய்வுக்கான காலமாக வகுத்துக் கொண்ட பேராசிரியர் தமது கட்டுரையின் தலைப்பைப் பின்வருமாறு குறித்துள்ளார்: ‘CASTE IN NORTHERN SRI LANKA AND […]
(‘எழுநா’ பதிப்பகத்தின் பிரசுரமாக 2024 – நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகமாக அமையும் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.) இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும் சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அரசியல் என்பன பற்றிய நுண்ணாய்வுகளாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் […]
ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]