ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா பிரசன்ன டி சொய்சா சட்டத்தரணியாகத் தொழில் புரிபவர். B.A, L.L.B, M.A (அரசியல் விஞ்ஞானம்) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்ட ஆய்வை தற்போது மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் சாதி உறவுகளும் ஜனநாயக அரசியலும் என்னும் விடயம் பற்றி சிறந்த ஆய்வுகளை எழுதி வருகிறார். அவரின் ஆய்வுக் கட்டுரையொன்றின் தழுவலாக்கத்தை இங்கு தந்துள்ளோம். பல […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு (CRIMINAL JUSTICE COMMISSION – சுருக்க எழுத்து : CJC) முன்னிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த ரோஹண விஜயவீர தமது கட்சி ஏன் புதிய இடதுசாரி இயக்கம் (NEW LEFT MOVEMENT) ஒன்றை ஆரம்பித்தது என்பதற்கான விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டார். “பழைய இடதுசாரி இயக்கம் சோஷலிசப் […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல இலவசக் கல்வித் திட்டமும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்களும் இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தோன்றிய கிராமப்புறத்தின் படித்த இளைஞர்களே, மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்தவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தொடர்பைச் சுட்டிக் காட்டியவர்கள் கல்வித் துறையில் ஏற்பட்ட இம்மாற்றங்களின் முக்கியத்துவத்தை சமூக வரலாற்று நோக்கு முறையில் விளக்குவதற்குத் தவறியுள்ளனர். இலங்கையில் கல்வி பரவலாக விரிவாக்கம் பெற்றமை […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல கிராமத்துத் தொழிலாளர்களையும் விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறும் வர்க்கமான கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், நகரத் தொழிலாளர் வர்க்கத்தோடு கொண்டுள்ள பிணைப்புகள் கிராம, நகர உறவுகளில் முக்கியத்துவம் பெற்றன. கிராமத்தில் சொத்துக்களை வைத்துக் கொண்டு நகரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு நிலை மட்டுப்பாடுடையதாக விளங்கியது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையை உடையவர்களாகக் […]
ஆங்கில மூலம் : G.B கீரவல்ல வித்தியோதயாப் பல்கலைக்கழக வளாகத்தின் பிக்கு மாணவர் விடுதியில் 1971 ஏப்ரல் 2 ஆம் திகதி ‘ஜனதா விமுக்தி பெரமுன’ என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் ‘பொலிட் பீரோ’வின் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பி.ப 11.30 மணிக்கு நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகளின் நிலைகள் மீதும் தாக்குதல் […]
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன 1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. […]
ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன ஜேம்ஸ் மனர் (James Manor) என்னும் பிரித்தானியரான அரசியல், வரலாற்று அறிஞர் ‘The Expedient utopian: Bandaranaike and Ceylon’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை காலம் சென்ற அறிஞர் றெஜி சிறிவர்த்தன எழுதினார். அவரது கட்டுரை ‘Thatched Patio’ என்ற ஆங்கில சஞ்சிகையில் 1990 ஜனவரி-பெப்ரவரி இதழில் பிரசுரமானது. அக் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பை இங்கே […]