ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]
டச்சு அரசாங்கத்தின் இலங்கை ஆளுநரான யோன் சைமன்ஸ் 1704 ஆம் ஆண்டில், கரையார் சமூகப் பிரிவினரின் குறைகளைக் கேட்டறிந்தமை பற்றிக் குறிப்பிட்டோம். யோன் சைமனுக்கு அப்போது சாணார் என்ற இன்னொரு சமூகப் பிரிவினரும் தம் குறைகளை முறையீடு செய்திருந்தமை எமது கருத்தை வலுப்படுத்தும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பழைய குடியேறிகளான வேளாளர்களுக்கு அடுத்த படிநிலையில் தாம் இருப்பதாக சாணார் கூறியிருப்பதானது சுவாரசியமான ஒரு தகவலாகும். இவர்கள் தென்னிந்தியாவின் மலபார் […]
’மேலாதிக்கச் சாதி’ என்னும் கருத்தை விளக்கும் மானிடவியல் ஆய்வுகள் பல உள்ளன. கிராமம், மாவட்டம், பிராந்தியம் என்ற மூன்று நிலைகளில் ஒரு சாதியின் மேலாதிக்கம் இருக்க முடியும். இந்த மேலாதிக்கத்தின் பண்புக் கூறுகள் சில உள்ளன என்றும் மானிடவியலாளர்கள் கூறுவர். ஒரு குறிப்பிட்ட சாதி சனத்தொகையின் பெரும்பான்மையாக இருக்கும்போது அந்தச்சாதிக்குப் பிறசாதிகளை விடப் பல சாதகமான நிலைமைகள் இருக்கும். சனத்தொகையில் பெரும்பான்மையாக இருத்தல் மூலம் மேலாதிக்கத்தை பெறுதல் நவீனத்துக்கு முந்திய […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் நியமப் பகுப்பாய்வு (Normative analysis) நியமத் திட்டம் உயர் குடித்திட்டம் படித்தர முறையிலான நல்லுறவு (hierarchical Amity) வர்த்தகத் திட்டம் படித்தர முறையிலான பயன் நோக்கு (hierachical Instrumentality) பொருத்தமான உறவுகளின் தெரிவு குறிப்பு : ‘Spatial Organization and Normative Schemes in Jaffna, Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1973 ஆம் ஆண்டு Modern Ceylon Studies, 4 […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் பகுதி 1 இல் நான் ஒரு குறிப்பிட்ட வகைச் சமூகச் செயல் பற்றிக் குறிப்பிட்டேன். இது புவி வெளியை Space ஒழுங்கமைத்துக் கொள்வது பற்றியது. இப்பகுதியில் சாதிகளுக்கிடையிலான நடத்தை நடைபெறும் இரு மாதிரிகளை modes of intercaste canduct) விளக்குவேன். இம்மாதிரிகள் இருவகைப்படும். 1. கட்டுண்ட சாதிகளின் நடத்தை அல்லது உறவு 2. கட்டுப்படாத சாதிகளின் நடத்தை விவசாயக் கிராமம், […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் வட இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பம் – அறிமுகம் ஆட்சேர்ப்பு (Recruitment) நேரம் /காலம் (Time புவிவெளி அல்லது இடவெளி(Space) வாடிக்கையாளர் (Clientele) விலைப்பொறிமுறை (Price Mechanism) சூழமைவு (Context) சமச்சீர் – சமச்சீர் இன்மை இருவேறு சாதி இடையூடாட்ட முறைகளிலும் செயலிகள் (Actors) தமது செயல்களை ஒன்றுக்கொன்று எதிரான நியமத்திட்டங்களின்படி (Normative Schemes) அமைத்துக் கொள்வர். ஒவ்வொரு நியமத்திட்டமும் குறிப்பிட்ட வகைக் குறியீடுகளுடனும் […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பற்றிய பண்பாடு, சமூகம், பொருளாதாரம் என்பனவற்றின் நோக்கிலான ஒரு விபரிப்பு யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகநிலை அவர்களைப் பற்றிய பண்பாட்டு வெளிப்படுத்தல்கள் என்ற இரு பிரச்சினைகளே இக்கட்டுரையின் பிரதான விடயப் பொருளாகும். இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்ப் பெண்கள் வெவ்வேறு பருவங்களில் எதிர்கொள்ளும் வாழ்வு, அவற்றோடு தொடர்புடைய சடங்குகள் என்பன கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்க்கை வட்டத்தூடே பயணிக்கும் பெண்கள் வெவ்வேறுபட்ட […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : க. அருமைநாயகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகத் தெளிவாக வெளிப்பட்டது. படித்த முற்போக்குச் சிந்தனையுடைய உயர்சாதி இந்துக்கள் சிலரும், தாழ்ந்த சாதியினர் எனப்படுவோரும் சாதிய நடைமுறைகளையும், அதன் தீங்கான அம்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்ததைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரிநின்றனர். மரணச் சடங்கின் போது மேளமடித்தல், பாடசாலைகளில் தம் பிள்ளைகளிற்குச் சம ஆசனம், கோயில்களில் உள்மண்டபத்திற்குள் […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன. சாதிகள் அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக […]
மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேளாளர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை சாதி அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற நிலையில் இருந்து உயரவிடாது தடுத்தமைக்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் மலிவான கூலி தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற தேவை. இரண்டாவது வேளாளரின் சாதி அந்தஸ்து தர அடுக்கில் தமது குடும்பத்தின் நிலையைத் தாழ்ந்து போகாது பாதுகாத்தல் (வேளாளர் சாதிக்குள் நூற்றுக்கணக்கான உபசாதிகள் உள்ளன). […]