இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய […]