மனித இனத்தை அடையாளப்படுத்துவதில் பண்பாடு மிகமுக்கியமான அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு மானிடவியலாளர்கள் பண்பாட்டுக்கு பல்வகைப்பட்ட விளக்கங்களை வழங்கியுள்ளனர். காலமாற்றம், கலாசார – சமூக – அரசியல் – பொருளியல் உற்பத்தி உறவுகள், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், உடல் – உளவியலியல் மாற்றங்கள், சமூக ஊடாட்டங்கள், கலப்புறவுகள், மணமுறைகளில் ஏற்படும் மாறுபாடுகள், போர்கள், முரண்கள், ஏனைய உயிரினங்களுடனான உறவு, உணவுமுறை, உற்பத்தி நுட்பங்கள், ஆரோக்கிய முயற்சிகள், விருந்தோம்பல், […]
நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே பொன்னர் – சங்கர் பற்றிய அறிதல் புலனாகிறது. முன்மாதிரியான செயற்பாடுகள், உதாரணம் பொருந்திய வாழ்க்கை முறைகள் என்பன காலம் கடந்த நிலையிலும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவங்களுள் ஒன்றாகவே பொன்னர் – சங்கர் பற்றிய அவதானம் கைக்கொள்ளப்படுகின்றமையை அறியலாம். தமிழ்நாட்டில் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பொன்னர் – சங்கர் […]