மலையகம் இலங்கையின் நடுப்பகுதியில் அமைந்த பகுதியாகும். இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களே மலையகத்தவராவர். இவர்கள் இந்நாட்டில் மத்திய மலைப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.¹ மலையக மக்கள் அதிகளவிலான தெய்வ நம்பிக்கை கொண்டோராகவும் இருந்தனர். இந்தியாவிலிருந்து வந்த ஆரம்ப காலத்தில் இம்மக்கள் பெரும்பாலும் படிப்பறிவு அற்றவர்களாய் இருந்தமையால் பாரியளவில் நாட்டாரியல் சார்ந்த மரபுகளின் மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டிருந்தனர். மலையகத்தாரில் அதிகமானோர் இந்துக்களாகக் காணப்பட்டனர். எனவே இவர்கள் இந்துச் சடங்கு சம்பிரதாயங்களில் […]