Events – Ezhuna | எழுநா

Latest Past Events

‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo

எழுநாவின் வெளியீடாகிய திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் 'வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' நூலின் அறிமுக நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 03.06.2026 அன்று இடம்பெற்றது. கலாநிதி எஸ். கே. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார்.   படங்கள் - திரு. தம்பையா ராஜரட்னம்

‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ – நூல் வெளியீட்டு நிகழ்வு – கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபம்.

Skill Development Center Ariviyal Nagar, Kilinochchi

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் ஆதரவுடன் எழுநா வெளியீடாகிய, அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் 'வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' நூலின் வெளியீட்டு நிகழ்வு 03.06.2026 (புதன்கிழமை), பி.ப 2.00 மணிக்கு மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. த. குருகுலராஜா மற்றும் ஓய்வுநிலைப் பாடசாலை அதிபர் திரு. சி. […]

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ – நூல் வெளியீட்டு நிகழ்வு – கனடா

Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON M1P 4N6, Toronto

ஓராயம் அமைப்பின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய திரு. இ. மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ நூலின் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரர் கவுன்சில் மண்டபத்தில் 24.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது. மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஓராயம் அமைப்பின் தலைவர் திரு. பிரேம் பிரேமச்சந்திரா வரவேற்புரையை வழங்கினார். நூலுக்கான விமர்சன உரைகளை திரு. வ.ந. நவரத்தினம், அருண்மொழிவர்மன் […]