Events – Page 2 – Ezhuna | எழுநா

‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – நல்லூர், சிவகுரு ஆதீனம்.

SIVAGURU ATHEENAM 692, Point Pedro Road, Nallur, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர், சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 (சனிக்கிழமை) அன்று, காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 வரை இடம்பெற்றது. கோபாலகிருஷ்ணன் பிரவீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் ஆசியுரையினை வழங்க, நூல் அறிமுக உரையினை சு.பிரவீன் அவர்கள் […]

மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு – நல்லூர் சிவகுரு ஆதீனம்.

SIVAGURU ATHEENAM 692, Point Pedro Road, Nallur, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் 'மாறுபாடில்லா உண்டி' எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. வேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க, 'ஏன் […]

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ் பிராந்தியம்.

Ocean University 2nd Cross Street, Jaffna, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் 'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. நூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வில் […]

சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வு – கொழும்பு தமிழ்ச்சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய, எழுநாவின் வெளியீடான, மலையக வரலாற்றைக் கூறும் 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.10.2025 அன்று இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் பெருந்தோட்ட வீடமைப்பு பிரிவின் முன்னாள் செயலாளர் திரு.எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் […]

ஆவணப்படத் திரையிடலும் புத்தக அறிமுக விழாவும்

Atchuveli Kalanithi Sanasamuga Nilayam Atchuveli, Jaffna, Northern, Sri Lanka

எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட 'நீதிக்காக நீண்ட காத்திருப்பு' எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் , செம்மணி தொடர்பான கவிதைகள் 'வாசலிலே கிருஷாந்தி' என்னும் நூலின் அறிமுக விழாவும் அச்சுவேலி தெற்கு, கலாநிதி சனசமூக நிலையத்தில் 27.09.2025 அன்று வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் கலாநிதி சன சமூக நிலைய தலைவரும் ஆகிய பி.நேருஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிலையத்தின் செயலாளராகிய தர்ஷன் அவர்களால் நூல் பற்றிய மதிப்பீட்டுரை […]

வாசலிலே கிருசாந்தி’ செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும்.

Chemmani junction Jaffna, Northern, Sri Lanka

கிருசாந்தி குமாரசாமி அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தலின் ஒரு அங்கமான எழுநாவின் தொகுப்பில் வெளிவந்த 'வாசலிலே கிருசாந்தி' செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை செம்மணி அணையா விளக்குத் திடலில் நடைபெற்றது. இந்நூலானது 47 கவிஞர்களின் 54 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந்நிகழ்வில் நூலின் முதல்பிரதிகளை கிருசாந்தியின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இந்நூலில் இடம்பெற்ற கவிதைகள் நிகழ்வில் கலந்து கொண்டோரால் வாசிக்கப்பட்டன. புகைப்படம் […]

‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் வெளியீட்டு விழா – விவசாயபீட கேட்போர் கூடம், கிளிநொச்சி வளாகம்

Faculty of Agriculture,University of Jaffna Ariviyal Nagar, Kilinochi, Northern, Sri Lanka

எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது கடந்த 28.08.2025 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விவசாயபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் தலைமை உரையினை விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் அவர்கள் வழங்க அணிந்துரையினை கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் […]

‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு – தளம் அமைப்பு, திருகோணமலை

Thalam organization 1st Floor, Periyakadai UC Complex, Dockyard Road, Trincomalee, Eastern, Sri Lanka

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் தலைமை உரையினை தளம் அமைப்பின் இயக்குநர் வைத்தியர் ஹயக்கிரிவன் அவர்கள் வழங்க, நூல் அறிமுக உரையினை தென்கயிலை ஆதீனம் சுவாமி அகத்திய அடிகளார் […]

‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் – சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், மட்டக்களப்பு

Swamy Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University of Sri Lanka Kallady, Batticaloa, Eastern Province, Sri Lanka

கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் 'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூலை மாதம், 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது. குறித்த நூலினது […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத்திரையிடல் – Movie Club, மட்டக்களப்பு

American Corner, Batticaloa 7A Saravana Rd, Kallady 30000, Batticaloa, Eastern Province, Sri Lanka

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் - Movie Club, மட்டக்களப்பு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ‘American Corner’ இல் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இத்திரையிடலில் பங்குபற்றியிருந்த பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட், “இது காலத்தின் தேவை கருதியதொரு ஆவணப்படம். இதன் காட்சியமைப்புகள் எனக்குப் […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo Tamil Sangam Society Ltd. S.73 07, Sangam Lane, Colombo-06 VVF8+38F Colombo Tamil Sangam, Sangam Ln, Colombo, Colombo, Western Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலானஆவணப்படமானது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 18.06.2025 அன்று, புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ – திரையிடல்

Association for Relatives of the Enforced Disappearances North & East Provinces North & East Provinces, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த யூன் மாதம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் திரையிடப்பட்டது. திரையிடலின் முதல் நிகழ்வாக, இவ் ஆவணத் திரைப்படத்தை உருவாக்கிய, அமரர் அ. இசைப்பிரியனுக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும், அதன் பின்னும், வலிந்து காணாமலாக்கப்பட்ட […]

“யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படத் திரையிடல் – கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்

கே.ஏ.எஸ். சத்தியமனை Sathiamanai Tholpuram West, Chulipuram 40230, Jaffna, Northern Province, Sri Lanka

எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்' என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில், கடந்த 06.06. 2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் […]

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621-1948)’ நூல் வெளியீட்டு விழா – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

University of Jaffna Ramanathan Rd, Jaffna, Northern, Sri Lanka

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயம்

VA/Puthukkulam Maha Vidyalayam Palampiddi - Thandikulam Rd, Vavuniya, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 28.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – பூநகரி ஜெயபுரம் சமாசம்

Jeyapuram Samaasham Jeyapuram, Poonagari, Jaffna, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பூநகரி, ஜெயபுரம் சமாசத்தில் 23.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய நிரஞ்சன் பரிளா,“குறிப்பாக மீன்பிடி சிறுதொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பூநகரியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் பல முன்னெடுத்திருந்தோம். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். இதுவரையிலும் எமக்கான […]

‘நீர்த்தகடல்’ ஆவணப்படத் திரையிடல் – வவுனியாப் பல்கலைக்கழகம்

university of vavuniya Pampaimadu, Vavuniya, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, வவுனியாப் பல்கலைக்கழகத்தினுடைய சுற்றுச்சூழல் கழகத்தின் ஒழுங்கமைப்பில் 21.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இத்திரையிடலில் பங்குபற்றிய மாணவர் ஒருவர், “வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடல் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட கடலட்டைப் பண்ணைகள், தமிழ் மக்களின் நிலையான பொருளாதார வளங்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பது […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – முல்லைத்தீவு திறன்விருத்தி நிலையம்

Mullaitivu Skill Development Centre Mullaittivu, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, முல்லைத்தீவு – திறன்விருத்தி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் 16.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திறன் விருத்தி நிலையத்தின் கற்கைநெறி மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய […]

நீர்த்த கடல் ஆவணப்படத் திரையிடல் – மன்னார் வேதசாட்சிகள் இராக்கினி ஆலயம்

Mannar - Vedasakshigal in the garden of the Irakini temple Mannar, Northern Province, Sri Lanka

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் 11.05.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மன்னார் -வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத் தோட்டவெளியில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய […]

‘இரச வர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச் சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo, Western, Sri Lanka

எழுநா மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 02.05.2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்விற்கு மருத்துவர் விக்ணவேனி செல்வநாதன் தலைமை வகித்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய சமூக ஆய்வாளரான திரு. கந்தையா சண்முகலிங்கம், “பால.சிவகடாட்சம் அவர்கள் ஏட்டுப்பிரதியிலிருந்த ‘இரசவர்க்கம்’ எனும் […]