
‘தளம்’ அமைப்பின் ‘களம்’ செயற்றிட்டத்தின் ஐந்தாவது விமர்சனக் கலந்துரையாடலாக, எழுநா வெளியீடான திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலை மையமாகக் கொண்ட விமர்சனக் கலந்துரையாடல், 16.05.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை, இல. 76, கடற்காட்சி வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள ‘தளம் நோவா’ அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் அபிநயா ரகுராம், இலக்கியச் செயற்பாட்டாளரும் உருகுணைப் பல்கலைக்கழக மாணவியுமான சதுர்த்திகா உதயகுமார், சமூக-அரசியல் செயற்பாட்டாளர் கேஷிஹன் இளமுருகநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
