
எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ மற்றும் க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’ நூல்களின் அறிமுக நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 28.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 12 மணிக்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கில் இடம்பெற்றது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தற்காலிக விரிவுரையாளராகிய உ. ஜீவதர்ஷன் அவர்கள் உத்தியாக்கள் நூல் பற்றிய அறிமுக உரையினையும், விரிவுரையாளர் ச. யாழினி அவர்கள் இருத்தலின் மீது கவியும் இன்மைகள் நூல் பற்றிய அறிமுக உரையினையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
