
ஓராயம் அமைப்பின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாகிய திரு. இ. மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ நூலின் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரர் கவுன்சில் மண்டபத்தில் 24.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஓராயம் அமைப்பின் தலைவர் திரு. பிரேம் பிரேமச்சந்திரா வரவேற்புரையை வழங்கினார். நூலுக்கான விமர்சன உரைகளை திரு. வ.ந. நவரத்தினம், அருண்மொழிவர்மன் மற்றும் Dr. மைதிலி தயாநிதி ஆகியோர் வழங்கினர்.
நூலின் முதற்பிரதியை யாழ் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. மு. ஆறுமுகசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தமிழ் பாரம்பரிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
