Articles - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தொல்லியல் காட்டும் சங்ககாலப் பெருங்கற் பண்பாடு

30 நிமிட வாசிப்பு

அறிமுகம்     இன்று தமிழகத்தில் உள்ள இலக்கியங்களில் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்ககால இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்ட போதிலும் மொழியியல் ஆய்வுகள், ஆரம்பகாலக் கல்வெட்டுகள், நாணயங்கள், கிரேக்க-ரோமானியர்களின் பதிவுகள், அகழாய்வுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விலக்கியங்களின் காலத்தை கி.மு. மூன்றாம்  நூற்றாண்டிற்கு முன்பாக எடுத்துச்செல்லலாம்.      இச் சங்ககால இலக்கியங்களில் முச்சங்கங்கள் பற்றிய குறிப்பு எதிலுமே காணப்படவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட […]

மேலும் பார்க்க

இது இன்னொரு போராட்டத்தின் கதை : பறைமேள இசை பல்கலைக்கழகத்துள் மெல்ல மெல்ல நுழைந்த கதை

10 நிமிட வாசிப்பு

பறை பற்றி பலரும் பேசும் காலம் இது. இதற்கு ஒரு வரலாற்றுப்பின்னணியும் சமூகப் பின்னணியும் உண்டு. தமிழகத்துள் 1950 களில் ஊடுருவிய பெரியார், அம்பேத்கார், மார்க்சிச சிந்தனைகளும் தொடர்ந்து வந்த அயோத்திதாசர், இரட்டைமலை ஶ்ரீநிவாசன் சிந்தனைகளும் பின்னாளில் எழுந்த தமிழ்த் தேசியச் சிந்தனைகளும், தலித்திய சிந்தனைகளும் பறை இசைப்போர் சமூகத்துக்கு ஒரு விசை வேகம் தந்தன. அத்தோடு இச்சிந்தனைகளினால் பறையைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்ட பறை இசைக்கும் சமூகத்தையும் தாண்டி […]

மேலும் பார்க்க

கதிர்காம முருகன் : சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும்

10 நிமிட வாசிப்பு

இலங்கையின்  தனித்துவ வழிபாட்டிடமாக கதிர்காம முருகன் ஆலயம் விளங்குகின்றது. வேடர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மக்களினதும் சங்கமமாகத் திகழும் கதிர்காமத்தின் தோற்ற மூலமானது வரலாற்றுத் தொன்மையுள் அமிழ்ந்துள்ளது. கடவுளரின் வரலாறானது குறித்த சமூக வரலாற்றுடனும் சூழலியல் சார் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்துள்ளது என மானிடவியலாளரான Pettezzoni (1956) குறிப்பிடுவார். இந்த வகையில் கதிர்காம முருகன் ஆலயத்தின் சூழலியல் பண்பாட்டுத்தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய ஒரு சமூக மானிடவியல் தரிசனமாக […]

மேலும் பார்க்க

கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்!

13 நிமிட வாசிப்பு

தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை. எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது  ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய […]

மேலும் பார்க்க

வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு

24 நிமிட வாசிப்பு

கால ஒழுங்கு (Chronology) இந்திய-இலங்கை மண்ணில் மனித இனங்கள் : இ.மு. 1800,000 வன்னியில் பழைய கற்கால மக்கள் : இ.மு. 125,000 நவீன மனிதனின் (homo sapiens) வருகை : இ.மு.  60,000 இடைக் கற்கால ஆரம்பம் : இ.மு.  33,000 இலங்கை தனித்தீவாகப் பிரிதல் : இ.மு.   7,000 இரும்புக்கால ஆரம்பம் : இ.மு.   3,380 வரலாற்றுக்கால ஆரம்பம் : இ.மு.   2,300 […]

மேலும் பார்க்க

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு

12 நிமிட வாசிப்பு

சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப. புஷ்பரட்ணம் ஆகியோர் […]

மேலும் பார்க்க

உருத்திரபுரத்தில் நாகரமைத்த புராதனமான கோயில்கள்

10 நிமிட வாசிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர்ந்த இடங்கள் பலவற்றில் மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற கள ஆய்வுகளின் விளைவாக, ஆதிவரலாற்றுக் காலத்திலே (கி.மு.300-கி.பி.400) தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிய நிலையில் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வவுனியா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் மூலமாகவும் இந்தக்கருத்து உறுதியாகின்றது. அங்குள்ள சின்னங்களிலே தமிழைத் தவிர்ந்த வேறெந்த மொழியின் அடையாளங்களும் இல்லாமை எல்லோரதும் சிந்தனைக்கு உரியதாகும். ஆனால், அங்கு பௌத்தம் தொடர்பான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்