Articles - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையுடனான அரேபியர் மற்றும் பாரசீகர்களின் வர்த்தக, கலாசார தொடர்புகள் : கி.பி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டுகள் வரை

33 நிமிட வாசிப்பு

இஸ்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே அரேபியர் சிறந்த வணிகர்களாக ஆசியாக் கண்டம் முழுவதும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆயினும், அரேபியர்களுக்கு முன்பிருந்தே பாரசீகர்கள் சீனாவுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இத்தகைய வர்த்தகத்தின் ஒரு முக்கிய தலமாக இலங்கை விளங்கியது. கிபி. 5 ஆம் நூற்றாண்டில் அனுராதபுர மன்னனோடு பாரசீகத்தின் சாசானியச் சக்கரவர்த்திகள் இராஜதந்திர ரீதியான உறவுகளைக் கொண்டிருந்தனர் (இமாம், 1944, 1965:13). பட்டுத் துணிகளை ஏற்றிவந்த சீனக் […]

மேலும் பார்க்க

‘மில்க்வைற்’ சுதேச நிறுவனம்: உள்ளூர் உற்பத்திக்கான உந்து சக்தி

11 நிமிட வாசிப்பு

முகப்பு  ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகள் (2023) இலங்கையின் ‘சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்’ பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது. மதிப்புச் சங்கிலிகளுடன் (Value Chain) மீண்டும் அக்கறையுடன் ஈடுபடுவதன் மூலம், உற்பத்தி மற்றும் வணிகங்களை புத்துயிர் பெறச் செய்ய முடியும். இலங்கையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 75% இற்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளன. இவை 20% இற்கும் அதிகமான ஏற்றுமதிகள், 45% […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் வகிபாகம்

28 நிமிட வாசிப்பு

(யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் – 2024’ இல் வழங்கப்பெற்ற நினைவுப் பேருரை.) எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்தித்து, இந்த நிகழ்வைத் தலமையேற்று நடத்துகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் அருட்பணி. ஜெறோம் செல்வநாயகம் அடிகளார்களே, இங்கு பிரசன்னமாயிருக்கும் தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் இயக்குனர் அருட்கலாநிதி.அ.பி. ஜெயசேகரம் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்களே மற்றும் அருட்சகோதரிகளே, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தகைசால் பேராசிரியர் […]

மேலும் பார்க்க

கடந்த கால அபிவிருத்தித் திட்டங்களின் பகைப்புலத்தில் ‘திருகோணமலை – கொழும்பு’ விரைவுப் பாதையும் பொருளாதார வலயமும்

15 நிமிட வாசிப்பு

1 இலங்கைப் போரின் பின்னணியில், தமிழ்க் கிராமங்கள் காணாமல் போயின. சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பெயர்களை மாற்றின. தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் பறிபோயின. நிலத்தை விட்டு விரட்டுவது என்பது ஒரு இனக்குழுவின் கலாசாரத் தளங்களை அழித்தல் ஆகும். இழைக்கப்பட்ட அட்டூழியங்களை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களிடமும் தப்பிப் பிழைத்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்காமல், கடந்த காலத் தவறுகளின் கள நிலையை உணராமல் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளைச் […]

மேலும் பார்க்க

பிராமி எழுத்து வடிவமும் தொடக்ககால எழுத்தறிவும்

23 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன. பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் : நடைமுறைகளும் சவால்களும்

11 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவ்வினங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாசாரப் பாதுகாப்பிற்கும், தாய்மொழியான தமிழ்மொழியின் பாதுகாப்பு முக்கியமானதாகும். இருந்த போதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பவற்றினாலும், இலங்கையில் வரலாற்றுரீதியாக சிறுபான்மையினர் மொழிரீதியான பாகுபாடுகளிற்கு உட்பட்டு வருவதனாலும், தமிழ்மொழி நலிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மேலும் இனமுரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமானளவு தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து […]

மேலும் பார்க்க

விராஜ் மென்டிஸ் : ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை

12 நிமிட வாசிப்பு
August 24, 2024 | எழில்

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று நிகழ்முறைக்கூடான பரிமாணத்தில் கட்டமைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு, தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் விராஜினுடைய பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு அவசியமானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைந்திருந்தது. விராஜினுடைய […]

மேலும் பார்க்க

தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல்

23 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தை முக்கியமான நிலைமாறுகட்ட காலமெனலாம். அக்காலத்திலேயே இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின்போது ஒரு நியமன உறுப்பினர் இந்தியர் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 1924 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் போது இந்தியர் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை இலங்கைவாழ் இந்தியருக்கும் வழங்கப்பட்டது. […]

மேலும் பார்க்க

வடமாகாணத்தின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான பொருத்தமான கல்வி முறைகளும்

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் தற்கால உலகளாவிய அபிவிருத்திப் போக்கானது பேண்தகைமையுடையதாக இல்லை என்பதை சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் எடுத்தியம்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகின்றது. மேலும், வளங்கள் வரையறுக்கப்பட்டவையாக இருப்பதுடன், அதிகரித்த சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இருப்பதால், பேண்தகு அபிவிருத்தியே இதற்கு ஒரே தீர்வாகும் எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது. தமக்கான பேண்தகு அபிவிருத்திக்கான பயணத்தில் ஒவ்வோரு நாடும், பல்வேறு சவால்களினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இச்சவால்களில் பல, எல்லா நாடுகளுக்கும் பொதுவானவையாகவும், […]

மேலும் பார்க்க

நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய கல்வி முறைமைகளை உருவாக்குதல்

24 நிமிட வாசிப்பு

அறிமுகம் கொவிட் – 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி, கல்விச் செயற்பாடுகளை நேரடியாகப் பாதித்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கம் தாமதமடைந்து  செல்கிறது. பொதுப்பரீட்சைகள் பிந்திக்கொண்டு செல்கின்றன. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. பாடசாலைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்