நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் மீதான அனுட்டிப்புகள் அவ்வகையில் அவதானத்திற்குரியவைகளாகும். அவ்வாறே பெண் தெய்வ வழிபாடு தொடர்பிலும் கொலையின் மூலமான தெய்வ அனுட்டிப்புகள் முக்கியத்துவத்திற்குரியதாக விளங்குகின்றன. முனி, கிராமத் தெய்வமாகவே உணரப்படுகின்ற நிலையில் இயக்கசக்தி மீதான கவனத்தைப் பெற்றுள்ளதாக அமைகிறது. பொதுவாகக் கிராமத் தெய்வங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தெய்வங்கள் உலகில் வாழ்ந்த தடயத்தைக் கொண்டுள்ளதோடு அவர்களது தியாகம், […]