தென்னாசியாவிலேயே தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியங்கள் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அன்று தொட்டு இன்றுவரை பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழுகின்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இங்கு பல்லினப் பண்பாட்டை வெளிப்படுத்தும் உச்ச காலப் பகுதியாக பொலநறுவை இராசதானி யுகம் விளங்கியது. இப்பொலநறுவை இராசதானியானது இலங்கையினுடைய இராசதானி வரலாற்றில், அனுராதபுரம் சோழர்களினால் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களால் […]
‘Cey-Nor’ நிறுவனம் அந்தோணி ராஜேந்திரம் அவர்களால் கனவு கண்டு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; 1960 களில் முளைத்து படிப்படியாக வார்க்கப்பட்டது. நோர்வேக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவின் நிமித்தமாக நோர்வே மக்களால் நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1960 களில், ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய மீன்பிடித்துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்புக்கு, எமது முன்னோர்கள் முயன்றார்கள் என்பதுக்கு Cey-Nor ஒரு எடுத்துக்காட்டு. 1983 களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாகப் பிடிக்கப்பட்ட மீனின் அளவு 50,000 மெற்றிக் […]
டெங்கு நோயின் உலகளாவிய பரவல் சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய விரிவான கவனம் குறைவு. அது பற்றிய தகவல்கள், ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் அரிது. எவ்வாறாயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், டெங்குவின் பொருளாதாரச் சுமை மீதான கவனத்தை ஈர்க்கும் முகமாக இவ் ஆரம்ப விசாரணை முன்வைக்கப்படுகிறது. ஆழமான விசாரணைக்கான ஒரு ஒரு பாதையின் ஆரம்பமாக […]
பின்புலம் அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு (Political Economy Analysis) என்பது ஒரு சூழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது, உடனடிப் பிரச்சினையின் மேற்பரப்பிற்குப் பின்னால் என்ன இருக்கிறது, போட்டியிடும் ஆர்வங்கள் உள்ளதா என்பனவற்றைக் கண்டறியும் முயற்சியாகும். அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு, ஒரு சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்முறைகளின் தொடர்புகளை ஆராய்கிறது. இது சமூகத்திலுள்ள குழுக்களின் அதிகாரத்தைப் புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது; அவர்கள் வைத்திருக்கும் நலன்கள் மற்றும் அவர்களை உந்துவிக்கும் ஊக்கங்கள், குறிப்பிட்ட […]
விடுதலைக்கான கருவி கல்வி சமுதாயத் தலைவர்களாக இருப்பவர்களின் கல்விநிலை தாழ்ந்திருக்குமாயின் நாட்டினுடைய முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்? இந்திய நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்தவர் பலர் எவ்வாறு ஆங்கில நாட்டில் கல்வி கற்றிருந்தனரோ அவ்வாறே இந்தோனேசியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் பலர் டச்சு நாட்டில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், கல்வி விடுதலைக்கான கருவி என்பது தனிநாயகம் அடிகளார் சிந்தனையாகும். ரஷ்யா : செய்தித்தாள்களே பொதுமக்களின் கல்விக்கழகம், அங்கு அனைவரும் செய்தித் […]
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘தமிழ்த்தூது வண. தனிநாயகம் அடிகளாரின் நான்காவது நினைவுப் பேருரை’ நிகழ்வில் பேராசிரியர். முனைவர். கு. சின்னப்பன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது. சுருக்கம் உரைநடை, நாவல், சிறுகதை, அகராதி, நகைச்சுவை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பீட்டு இலக்கியம் என்று பல முதற்பணிகளைத் தமிழுக்குச் செய்தவர்கள் கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டில் ஈழம் தந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் (1913-1980), […]
பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். […]
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் ‘நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது. நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க […]
தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. […]
இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும். ஜனாதிபதியாக இருந்தபோது […]