பேராசிரியர் க. கைலாசபதி (1933-1982) தனது நாற்பத்தொன்பதாம் வயதில் இவ்வுலகச் செயற்பாட்டில் இருந்து விடைபெற்ற போது எமது நாடு ஒரு நிலைமாறு கட்டத்தை அனுபவிக்கத் தொடங்கியிருந்தது. முன்னதாகச் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்து வந்த மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியிருந்த எமது நாடு, ஏனையவை போலவே, ஐக்கிய தேசியக் கட்சி 1977 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறியது முதலாக, திறந்த பொருளாதாரக் கொள்கையை அனுமதிக்கும் மாற்றத்துக்கு ஆட்பட்டிருந்தது. அத்தகைய […]