May 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

“பங்கீடு செய்வதற்கும் இழப்பதற்கும் ஓர் உலகமே உள்ளது”

3 நிமிட வாசிப்பு
May 6, 2026

மீநிலங்கோ அவர்கள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ‘அபிவிருத்தி, சக்தி மற்றும் பேண்தகைமை’ முதுகலை திட்டத்தை வழிநடத்துகிறார். மானுடப் புவியியல் புலமையுடன் சமூக விஞ்ஞான ஆய்வுத் துறைகளிலும் நிபுணத்துவம் உடையவர். இலக்கியம், விமர்சனம் ஆகிய துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்.  இந்நூல் இலங்கையை மையப்படுத்தி, பசுமை என்ற எண்ணக்கரு, இலங்கையில் சூழலியல், சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் நீர்மின்சாரம், நீலப்புரட்சி, மேல்கொத்மலைத் திட்டம், […]

மேலும் பார்க்க

‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூல்: காலநிலை பற்றிய ஓர் எதிர்வுகூறல்

4 நிமிட வாசிப்பு
April 29, 2026

‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூலானது, நாகமுத்து பிரதீபராஜா (யாழ் பல்கலைக்கழக புவியியற்துறைப் பேராசிரியர்) அவர்களால் காலத்தின் தேவையறிந்து நீண்டகால ஆய்வின் பயனாக எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் காலநிலை அனர்த்தங்கள் முனைப்புப் பெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் காலநிலை, அதில் ஏற்படும் மாற்றம் பற்றிய அறிவு, தெளிவு, புரிதல் புவியியலாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே நூலாசிரியர் […]

மேலும் பார்க்க

இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’

2 நிமிட வாசிப்பு
April 22, 2026

இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்தவர்; தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம். ‘ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவரிற்குமாக’ படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோவின், யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியும், அதனைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களும் […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்

7 நிமிட வாசிப்பு
February 27, 2026

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]

மேலும் பார்க்க

ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் – ‘உத்தியாக்கள்’

11 நிமிட வாசிப்பு
February 9, 2026

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் […]

மேலும் பார்க்க

நூல் மதிப்புரை: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்

15 நிமிட வாசிப்பு
January 31, 2026

நூல்: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும் தொகுப்பும் தமிழாக்கமும் : கந்தையா சண்முகலிங்கம் பதிப்பகம்: எழுநா ஆண்டு: 2025 பக்கங்கள்: 268 விலை: 1, 500 இலங்கை ரூபா ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்த ஒன்று. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்களைக் கொண்டுள்ளது. […]

மேலும் பார்க்க

பசுமை எனும் பேரபாயம்: சூழலியல் பற்றிய மறுபார்வை

3 நிமிட வாசிப்பு
December 8, 2025

தோழர் மீநிலங்கோ தெய்வேந்திரன் எழுதி, ‘எழுநா’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘பசுமை எனும் பேரபாயம்’ என்கிற நூல். இதன் விலை: 1400 இலங்கை ரூபாய். இலங்கைச் சூழலில் சூழலியம் சார்ந்து வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல் இது. உலகமயம் என்கிற மாயக்கரம் எல்லை தாண்டி மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களை, அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற பெயரில் கொள்ளையிடுகின்றன. மிதமிஞ்சிய வளச்சுரண்டல் எம் நாடுகளைப் பாலைவனமாக்கக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில் அபிவிருத்தித் […]

மேலும் பார்க்க

கிருசாந்தி இன்னும் ஏன் வாசலிலே நிற்கிறார்? 

5 நிமிட வாசிப்பு
November 6, 2025

இப்புத்தகத்திற்கு ஏன் வாசலிலே கிருசாந்தி எனப் பெயர் வந்தது? கிருசாந்தி உயிருடன் இல்லை, ஆனால் அவரது ஆத்மா, அவரது குரல் இன்றும் நீதி கேட்டு வாசலிலே நிற்கிறது. இப்புத்தக அறிமுகத்திற்குச் செல்ல முன்னர், இப்புத்தகம் தோன்றியமைக்கு ஒரு காரணம் உண்டு. அதனைச் சற்று எட்டிப் பார்த்துவிட்டு வர எண்ணுகிறேன். நம் அனைவருக்கும் தெரியும் ‘கிருசாந்தி குமாரசுவாமி’யின் பாலியல் பலாத்காரப் படுகொலை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்சநஞ்சமல்ல, இன்றுவரை அவ் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் – காலத்தின் தேவை கருதிய நூல்

3 நிமிட வாசிப்பு
October 30, 2025

முனைவர் சின்னத்துரை ஜேம்சன் அரசகேசரி அவர்கள் எழுதிய ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூல் வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது. வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள் தனித்துவமான தரைத்தோற்றங்களைக் கொண்ட அழகிய, வளமிக்க நிலப்பரப்புகளாக இருப்பதோடு மட்டுமல்லாது பரந்துபட்ட உயிர்ப்பல்வகைமையையும் கொண்டுள்ளன. இருப்பினும் அதன் அபிவிருத்தி நோக்கில், உயிர்ப்பல்வகைமையின் இருப்புப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் அரிதாகவே உள்ளன. வடக்கு – கிழக்குப் […]

மேலும் பார்க்க

மாறுபாடில்லா உண்டி: சித்த மருத்துவ நோக்கில் யாழ்ப்பாணத்தின் உணவுப் பாரம்பரியம்

6 நிமிட வாசிப்பு
October 24, 2025

பசி என்பது ஓர் உயிரியல் தூண்டல்; எல்லா உயிரினங்களிடமும் நிலவும் பொதுவான பண்பியல்பும் கூட. பசி உணர்வின் எதிர்வினையாக அமைவது உணவு. எல்லா உயிரினங்களும் உணவினை உண்ணுதலை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக பழக்கப்படுத்தியுள்ளன. ஆனால் மனிதன் மட்டும் உணவினைப் பதப்படுத்தி சமைத்து உண்ணும் நடைமுறையினை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இதுவே உணவின் உடலியல் தேவையினைக் கடந்து பண்பாட்டின் பரிமாணமாக வியாபித்துள்ளது.  உலகில் உள்ள ஒவ்வொரு பகுதியினரும் உணவினைத் தங்களின் பண்பாட்டு […]

மேலும் பார்க்க