May 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பசுமையின் அபாயங்களும் அபிவிருத்தியின் ஆபத்துகளும்

10 நிமிட வாசிப்பு
August 6, 2026

இலங்கையில் அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் நவீன அபிவிருத்தித் திட்டங்களின் பின்னாலுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், மறைக்கப்பட்ட பொருளாதாரக் காரணிகளையும் விரிவான தரவுசார்ந்த ஆய்வுகளுடன் விவரிக்கிறது கலாநிதி ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் ‘பசுமை எனும் பேராபாயம்’ என்ற நூல். தற்காலச் சூழலியல் கொள்கைகள் குறித்த முறையான விசாரணையையும், புறவயமான விமர்சனப் பார்வையையும் முன்வைக்கும் இந்நூலின் உள்ளடக்கத்தை விரிவாக ஆராயும்போது மட்டுமே, இதன் முகப்புத் தலைப்பில் உள்ள குறியீட்டுத் தனித்துவத்தையும் அதன் […]

மேலும் பார்க்க

‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் குறித்த வாசிப்பு

7 நிமிட வாசிப்பு
July 30, 2026

ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களின் வாசிப்பனுபவங்கள் தொடர்பிலான கட்டுரைகளின் தொகுப்பே இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’. எழுநாவின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் அட்டைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளங்கோவின் வீடு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது பயணங்களின் போது போரினால் கைவிடப்பட்ட வீடுகளைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை மீட்டிப் பார்க்க வைத்தது. அந்த வீடுகளின் ஏக்கமும், அவை கொண்டுள்ள கதைகளும் ஏராளம். உண்மையில் இந்நூலை வாசிக்கின்றபோது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை […]

மேலும் பார்க்க

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்

10 நிமிட வாசிப்பு
July 22, 2026

அமரசிங்கம் கேதீஸ்வரன் எழுதிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலுக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதில் பெருமை கொள்கிறேன். 2025இல் வெளிவந்துள்ள இந்நூல் ஒன்பது அத்தியாயங்களையும் 168 பக்கங்களையும் கொண்டுள்ளதுடன், அழகுற வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தையும் கொண்டிருக்கிறது. இதற்கான அணிந்துரைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவராலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராலும் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் என்னுரை என்ற பகுதியைத் தந்துள்ளார். எங்கள் எல்லோருக்கும் பரிச்சயமான நூலாசிரியரின் தாயாருக்கு இந்நூல் […]

மேலும் பார்க்க

இருத்தலின் மீது கவியும் இன்மைகள்: குற்றவுணர்வின் மொழி

6 நிமிட வாசிப்பு
July 13, 2026

பொதுவாகவே நூல் விமர்சனங்கள் – அறிமுகங்கள் மிக முக்கியமானவை. இவை படைப்பாளிக்கும் நுகர்வோருக்கும் (வாசகர்-வாசிப்பவர்) இடையில் ஒரு நெருக்கத்தை உண்டாக்குகின்றன. நுகர்வோரின் கருத்துகளை மீள் பரிசீலிக்கின்றன. நுகர்வோருக்கான தேடலை அதிகரிக்கின்றன. அதே சமயம் விமர்சகரின் அனுபவங்கள், அறிந்தவை, கருத்தியல் என்பன விமர்சனத்தினூடாக வெளிப்படுகின்றன. இது நுகர்வோருக்கு விமர்சகர்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது. இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூலையும் அறிமுகப்படுத்துவதில் அவசியம் உள்ளது. எழுநாவின் வெளியீடான இந்நூலை […]

மேலும் பார்க்க

அரசியலாக்கப்பட்ட நிலம்: மயிலத்தமடு – மாதவனை

5 நிமிட வாசிப்பு
June 24, 2026

ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசாரம், அடையாளம் மற்றும் அரசியல் இருப்பு ஆகியவற்றின் அசைக்க முடியாத அடித்தளமே நிலம் என்பதாகும். சிறுபான்மை இனக்குழுக்களைப் பொறுத்தவரையில், நிலம் என்பது அவர்களின் கூட்டுரிமை, சுயஅடையாளம் மற்றும் சுயநிர்ணய உரிமையின் மையக் கூறாக விளங்குகின்றது. எனவேதான், உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாரம்பரிய நிலங்களைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். மறுபுறம், வரலாற்றைப் பின்னோக்கிப் […]

மேலும் பார்க்க

“பங்கீடு செய்வதற்கும் இழப்பதற்கும் ஓர் உலகமே உள்ளது”

3 நிமிட வாசிப்பு
May 6, 2026

மீநிலங்கோ அவர்கள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ‘அபிவிருத்தி, சக்தி மற்றும் பேண்தகைமை’ முதுகலை திட்டத்தை வழிநடத்துகிறார். மானுடப் புவியியல் புலமையுடன் சமூக விஞ்ஞான ஆய்வுத் துறைகளிலும் நிபுணத்துவம் உடையவர். இலக்கியம், விமர்சனம் ஆகிய துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்.  இந்நூல் இலங்கையை மையப்படுத்தி, பசுமை என்ற எண்ணக்கரு, இலங்கையில் சூழலியல், சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் நீர்மின்சாரம், நீலப்புரட்சி, மேல்கொத்மலைத் திட்டம், […]

மேலும் பார்க்க

‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூல்: காலநிலை பற்றிய ஓர் எதிர்வுகூறல்

4 நிமிட வாசிப்பு
April 29, 2026

‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூலானது, நாகமுத்து பிரதீபராஜா (யாழ் பல்கலைக்கழக புவியியற்துறைப் பேராசிரியர்) அவர்களால் காலத்தின் தேவையறிந்து நீண்டகால ஆய்வின் பயனாக எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் காலநிலை அனர்த்தங்கள் முனைப்புப் பெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் காலநிலை, அதில் ஏற்படும் மாற்றம் பற்றிய அறிவு, தெளிவு, புரிதல் புவியியலாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே நூலாசிரியர் […]

மேலும் பார்க்க

இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’

2 நிமிட வாசிப்பு
April 22, 2026

இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்தவர்; தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம். ‘ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவரிற்குமாக’ படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோவின், யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியும், அதனைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களும் […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு ஆய்வுகள்

7 நிமிட வாசிப்பு
February 27, 2026

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]

மேலும் பார்க்க

ஒரு பழங்குடியின் தார்மீகக் கோபம் – ‘உத்தியாக்கள்’

11 நிமிட வாசிப்பு
February 9, 2026

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் […]

மேலும் பார்க்க