
எழுநாவின் வெளியீடாகிய திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 12.08.2026 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வீரகேசரி, செய்தி ஆசிரியர் ஆர். ராம் அவர்கள் நூல் அறிமுக உரையினை வழங்கியிருந்தார்.
தனபாலசிங்கம் அவர்கள் தனது உரையில், நூலாசிரியரின் நிர்வாகப்பணிகள் மற்றும் மொழிபெயர்ப்புப்பணிகள் பற்றிக் குறிப்பிட்டதோடு, அதிகாரப்பகிர்வு மற்றும் சுயாட்சி பற்றி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஆர். ராம் அவர்கள் உரையாற்றுகையில் நூலில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், நூலாசிரியரின் ஆய்வுப் புலமை பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
