
எழுநா வெளியீடாகிய இளங்கோ அவர்களின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் அறிமுக நிகழ்வு இல 10, புதிய வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள கூடத்தில் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியராகிய றிஹானா நெளபர், ஊடகவியலாளராகிய கேஷாயினி எட்மண்ட் மற்றும் பல்கலைக்கழக மாணவராகிய பா. பிரேமிதன் ஆகியோர் நூல் பற்றி உரையாற்றியிருந்தனர்.
நிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞரும் பாடலாசிரியருமாகிய அக்ஸயா பாஸ்கரமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார்.
வாசகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
