Events from June 6 – May 28 – Ezhuna | எழுநா

“யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படத் திரையிடல் – கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்

கே.ஏ.எஸ். சத்தியமனை Sathiamanai Tholpuram West, Chulipuram 40230, Jaffna

எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்' என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில், கடந்த 06.06. 2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் […]

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621-1948)’ நூல் வெளியீட்டு விழா – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

University of Jaffna Post Box 57, Ramanathan Road Thirunelvely, Jaffna

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் […]

‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயம்

VA/Puthukkulam Maha Vidyalayam Palampiddi - Thandikulam Rd, Vavuniya

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 28.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த […]