எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்’ என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில், கடந்த 06.06. 2025 அன்று, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.