
எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
வேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க, ‘ஏன் இந்தப் புத்தகத்தினை வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ணன் பிரவீன்ராஜ் அவர்கள் உரையாற்றியிருந்தார். நூலாசிரியரும் சித்த மருத்துவருமாகிய தியாகராஜா சுதர்மன் அவர்களால், அருகிவரும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக பெருகி வருகின்ற நோய்கள் தொடர்பில் சிறப்புரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள், மாணவர்கள், சித்த மருத்துவத் துறையினர், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
