எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, 28.05.2025 அன்று, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.