யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ எனும் தலைப்பிலான ஆவணப்படம் சனிக்கிழமை, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு, கிளிநொச்சி- முல்லைத்தீவு OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது. ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன் “இவ்ஆவணத்திரையிடலானது, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார். இத்திரையிடலில் குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.