
மக்கள் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில், யாழ் ஏழாலை மகாவித்தியாலயத்தில் 13.06.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற “நூறு நூல்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழாவில் மூன்று நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது.
அவற்றில், எழுநா வெளியீடான, திரு. கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நூலுக்கான அறிமுக உரையை மூத்த எழுத்தாளர் திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வழங்கியிருந்தார்.
மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
