எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, முல்லைத்தீவு – திறன்விருத்தி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் 16.05.2025 அன்று, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திறன் விருத்தி நிலையத்தின் கற்கைநெறி மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.