BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ezhuna | எழுநா - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Ezhuna | எழுநா
X-ORIGINAL-URL:https://www.ezhunaonline.com
X-WR-CALDESC:Events for Ezhuna | எழுநா
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260422T170000
DTEND;TZID=Asia/Kolkata:20260422T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20260424T095608Z
LAST-MODIFIED:20260424T095650Z
UID:38409-1776877200-1776880800@www.ezhunaonline.com
SUMMARY:வடக்குப் பிராந்திய காலநிலையியல்  - நூல் அறிமுக நிகழ்வு -  கொழும்புத் தமிழ்ச்சங்கம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, பேராசிரிய‌ர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nசிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. \nதிரு. அனந்த பாலகிட்ணர் தனது உரையில் இன்று காலநிலை பற்றிய விழிப்புணர்வின் அவசியம்\, யாழ் மக்களின் வாழ்வியலில் மரங்கள் பெறும் முக்கியத்துவம்\, யாழில் பழைய பூங்காவை அமைத்த கதை\, வட பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து அறியத் தந்தார். \nதிரு. க. அறிவழகன்\, நூல் ஆசிரியரை அறிமுகம் செய்து இந்நூல் எழுதப்பட்ட நோக்கம்\, நூல் பேசும் விடயப் பரப்பு\, அதன் சிறப்புகள்\, நூல் பற்றிய தனது கருத்துகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்தினார். \nமாணவர்\, கல்வியியலாளர்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/northern-regional-climatology-book-launch-event-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/04/FT-15.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260308T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260308T110000
DTSTAMP:20260427T134912
CREATED:20260313T062328Z
LAST-MODIFIED:20260313T062328Z
UID:38072-1772964000-1772967600@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வு -  இரத்தோட்டை பிரதேச சபை மண்டபம்.
DESCRIPTION:நிமிர் விடுதலை இயக்கத்தினால் ‘காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூலை முன்வைத்து ‘மலையகத்தில் சூழல் கரிசனையற்ற திட்டங்கள் பற்றிய மறுவிசாரணை’ என்ற தலைப்பில் உரை இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில் பிரதேச மக்கள்\, சமூக ஆர்வலர்கள்\, மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். \n   \n 
URL:https://www.ezhunaonline.com/event/the-green-revolution-book-launch-event-rathottai-pradeshiya-sabha-hall/
LOCATION:Rattota Pradeshiya Sabha\, Rattota Pradeshiya Sabha\, Raththota\, Matale\, Central Province\, 21\,000
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT-12.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260307T163000
DTEND;TZID=Asia/Kolkata:20260307T184500
DTSTAMP:20260427T134912
CREATED:20260310T042405Z
LAST-MODIFIED:20260310T042405Z
UID:38036-1772901000-1772909100@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை\, புத்தளம்.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\, ‘PILLARS’ அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி\, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில்\, 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது. \nZ.A. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Z.A.M. ரஸ்மி\, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும்\, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் இழப்பீட்டுக்கான அலுவலக ஆணையாளருமாகிய நஸீஹா ஹிஸ்மி அவர்களும்\, புத்தளம் மாவட்டச் செயலக புள்ளிவிபரக்கிளையின் மாவட்டப் பிரதிப்பணிப்பாளரகிய S. தனபாலசிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர். \nPILLARS அமைப்பின் செயலாளர் ரினாஸ் முஹம்மத் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பினை\, இலங்கை தேசிய நீருயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வள வளர்ப்பு நிபுணர் A. அர்ஷத் அலி அவர்கள் வழங்கியிருந்தார். \nநூல் அறிமுகத்தினைத் தொடர்ந்து PILLARS அமைப்பின் இப்தார் நிகழ்வுகளும் இடம்பெற்றன. \nமதகுருமார்கள்\, சூழலியலாளர்கள்\, மாணவர்கள்\, சமூக சேவகர்கள் \, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-green-revolution-book-launch-event-and-discussion-zahira-primary-school-puttalam/
LOCATION:Zahira Primary Schoo\, 2RRH+9F4\, Mannar Rd\, Puttalam\, 6130\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT-8.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260228T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260228T110000
DTSTAMP:20260427T134912
CREATED:20260303T035329Z
LAST-MODIFIED:20260303T035329Z
UID:37955-1772272800-1772276400@www.ezhunaonline.com
SUMMARY:இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - நூல் வெளியீட்டு நிகழ்வு - திருமறைக்கலாமன்றம்\, யாழ்ப்பாணம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு\, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று\, காலை 10.00 மணிக்கு – 238\, பிரதான வீதி\, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் – திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது. \nதிரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க\, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.\nநிகழ்வின் தொடர்ச்சியாக\, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க\, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். \nநிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும்\, பேச்சாளர்களுக்கும்\, நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள்\, வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/poetic-pleasures-on-existence-book-launch-event-thirumaraikalamandram-jaffna/
LOCATION:Thirumarai Kalamanram\, 238 Main Street\, A9\, Jaffna\, 4000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260225T174500
DTEND;TZID=Asia/Kolkata:20260225T183000
DTSTAMP:20260427T134912
CREATED:20260227T045632Z
LAST-MODIFIED:20260227T054332Z
UID:37925-1772041500-1772044200@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nதிரு. த. இராஜரட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு. த. ரெஷாங்கன் அறிமுக உரையினை ஆற்றியிருந்தார். வாசகர்கள் \, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-green-deal-book-launch-event-and-discussion-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/02/FT-18.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260131T160000
DTEND;TZID=Asia/Kolkata:20260131T170000
DTSTAMP:20260427T134912
CREATED:20260202T091008Z
LAST-MODIFIED:20260202T091048Z
UID:37722-1769875200-1769878800@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
DESCRIPTION:மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் அறிமுக உரையினை வழங்கியிருந்தார். \nவாசகர்கள்\, மாணவர்கள்\, பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-great-risk-of-greenery-book-launch-event-and-discussion-tellippalai-mahajana-college/
LOCATION:Vallai-Tellippalai-Araly Rd\, Tellippalai\, Sri Lanka\, Vallai-Tellippalai-Araly Rd\, Tellippalai\, Northern\, 4000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/02/FEATURE.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260103T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260103T110000
DTSTAMP:20260427T134912
CREATED:20260108T040915Z
LAST-MODIFIED:20260108T040915Z
UID:37546-1767434400-1767438000@www.ezhunaonline.com
SUMMARY:'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' – நூல் அறிமுக நிகழ்வு –  வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்.
DESCRIPTION:வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய\, திரு. க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூலின் அறிமுக நிகழ்வு 03.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. \nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்\, ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி விஜயலட்சுமி இராஜமனோகர் அவர்கள் நூல் அறிமுகவுரையினை வழங்கியிருந்தார். \nநூலாசிரியர் திரு. க. பத்திநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன்\, நிகழ்வில் சிற்றுரையும் ஆற்றியிருந்தார். \nஎழுத்தாளர்கள்\, வாசகர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/uthiyas-cultural-movements-of-the-eastern-coastal-fishermen-book-launch-event-vavuniya-sudthananda-hindu-youth-association-hall/
LOCATION:வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்\, Vavuniya Town\, Vavuniya\, Northern\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/01/ft-6.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251228T160000
DTEND;TZID=Asia/Kolkata:20251228T170000
DTSTAMP:20260427T134912
CREATED:20260106T035139Z
LAST-MODIFIED:20260106T035139Z
UID:37497-1766937600-1766941200@www.ezhunaonline.com
SUMMARY:'இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும்' – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – பொகவந்தலாவ\, க்றீன் லைன் மண்டபம்.
DESCRIPTION:எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான ‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்\, அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்\, டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பொகவந்தலாவ க்றீன் லைன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய அறிமுக உரையினை ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமாகிய பெ. சசிக்கலா அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அண்மையில் இலங்கையைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தினால் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக்கழகத்தின் ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
URL:https://www.ezhunaonline.com/event/two-centuries-of-the-highlands-pain-and-life-book-launch-event-and-discussion-bogawantalawa-green-line-hall/
LOCATION:Bogawantalawa\, Green line hall\, Nuwara Eliya\, central\, 20200\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/01/ft-2.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251123T090000
DTEND;TZID=Asia/Kolkata:20251123T103000
DTSTAMP:20260427T134912
CREATED:20251126T100823Z
LAST-MODIFIED:20251126T101139Z
UID:37102-1763888400-1763893800@www.ezhunaonline.com
SUMMARY:'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' - நூல் அறிமுக நிகழ்வு - நாவலப்பிட்டி\, கதிரேசன் மத்திய கல்லூரி
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்களின் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வு நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி\, கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில்\, அமரர் எஸ். தர்மசீலன் அமர்வில் கடந்த 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. \nகதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் திரு. எஸ். ரகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கலைக்கழக குழுவின் அங்கத்தவரும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமாகிய கவிஞர் சு. முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை பஸ்பாகே கோரளை பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு. எஸ். சிவக்குமார் வழங்க\, நூல் அறிமுக உரையினை சென். மேரிஸ் கல்லூரி ஆசிரியர் திருமதி. ஜெ.கே. சசிகாந்தன் வழங்கியிருந்தார். ஆய்வுரையினை ஆய்வாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு. ஏ.சி.ஆர். ஜோன் வழங்க\, ஏற்புரையினை நூலாசிரியர் இரா. சடகோபன் வழங்கியிருந்தார். நன்றியுரையினை புகைப்படக்கலைஞரும் ஊடகவியலாளருமான திரு. எஸ். ஹேமானந் வழங்கியிருந்தார். இந்நிகழ்வினை நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் அமைப்பாளரான அருணாசலம் லெட்சுமணன் ஒருங்கமைக்க\, நிகழ்ச்சித் தொகுப்பினை ஆசிரியர் திரு. வி.எம். ரமேஸ் வழங்கியிருந்தார். \n“கால அடிப்படையில்\, தேயிலைக்காலத்தில் சட்டம்\, இனவாதம்\, தோட்ட நிர்வாகம்\, தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் சதிகளில் இருந்தும் சூழ்ச்சிகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு மீண்டெழுந்துள்ளனர் என்பது பற்றி அனைவருக்கும் புரியக்கூடிய மொழிநடையில்\, பல புதிய விடயங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்” என ஆய்வுரையின் போது திரு. ஜோன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். \nஇந்நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர்\, வாசகர்கள்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நூலாசிரியரால் சிறப்புப்பிரதிகளும் வழங்கப்பட்டன.
URL:https://www.ezhunaonline.com/event/a-history-beyond-conspiracies-and-plots-book-launch-event-kathiresan-central-college-nawalapitiya/
LOCATION:Kathiresan Central College\, 114 Kothmale Rd\, Nawalapitiya\, central\, 20650\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-6.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251121T150000
DTEND;TZID=Asia/Kolkata:20251121T170000
DTSTAMP:20260427T134912
CREATED:20251125T040330Z
LAST-MODIFIED:20251125T040535Z
UID:37041-1763737200-1763744400@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்' - நூல் வெளியீட்டு நிகழ்வு - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் ஏற்பாட்டில்\, நவம்பர் 21 (2025) வெள்ளிக்கிழமை அன்று\, மாலை 3 மணிக்கு கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. \nசமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி ச. சிறிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை செல்வி எம்.எச்.எவ். ஹசீபா (மாணவி\, சமூகவியல் துறை) அவர்கள் வழங்க\, நூல் வெளியீட்டுரையினை இ. இராஜேஸ்கண்ணன் (சிரேஷ்ட விரிவுரையாளர்\, சமூகவியல்துறை) அவர்கள் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் நூலை வெளியிட்டு வைக்க\, நூலின் முதற்பிரதியை மொழியியல் மற்றும் ஆங்கில மொழித் துறையின் தலைவர் கலாநிதி எம். திருவரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலுக்கான மதிப்பீட்டுரைகளை சட்டத்தரணியும் அரசியல் மற்றும் சமூக ஆய்வாளருமான திரு. சி.அ. யோதிலிங்கம் அவர்களும்\, திரு. ந. மயூரரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்\, கலாசார மத்திய நிலையம்\, பருத்தித்துறை) அவர்களும் வழங்கினர். \nமதிப்பீட்டுரையின் போது “அட்டைப்படம் யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை மிகவும் தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளது” எனவும்\, “சாதியம் தொடர்பான பிற்கால ஆய்வுகளை இனிவருகின்ற ஆய்வாளர்கள் நடாத்த வேண்டும்” எனவும் திரு. யோதிலிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நூலில் உள்ள விடயப்பரப்பை ஏனையோர் வாசிக்கத் தூண்டும் வகையில் திரு. மயூரரூபன் அவர்களின் மதிப்பீட்டுரை அமைந்திருந்தது. \nஇந்நிகழ்வில் விரிவுரையாளர்கள்\, மாணவர்கள்\, பல்கலைக்கழக சமூகத்தினர்\, நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். \nபுகைப்படங்கள் : குணபாலன் இளங்கீரன்\n             \n 
URL:https://www.ezhunaonline.com/event/caste-structure-and-social-relations-in-jaffna-book-launch-event-university-of-jaffna/
LOCATION:University of Jaffna\, Ramanathan Rd\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-4.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251109T170000
DTEND;TZID=Asia/Kolkata:20251109T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20251112T062159Z
LAST-MODIFIED:20251112T063036Z
UID:36978-1762707600-1762711200@www.ezhunaonline.com
SUMMARY:'காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' - நூல் அறிமுக நிகழ்வு - திருகோணமலை தளம் கட்டமைப்பு.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, ‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் 09.11.2025 அன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள தளம் கட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய விமர்சன உரையினை செல்வி.பிரத்திக்கா பத்மநாதன் மற்றும் செல்வி.அன்ரனி ஸ்டீபன் கெளசிகா ஆகியோர் வழங்கியிருந்தனர். \nநிகழ்வில்\, தளம் அமைப்பின் நலன் விரும்பிகள்\, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/betrayed-sea-and-abandoned-people-book-launch-event-trincomalee-site-structure/
LOCATION:Thalam organization\, 1st Floor\, Periyakadai UC Complex\, Dockyard Road\, Trincomalee\, Eastern\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251101T100000
DTEND;TZID=Asia/Kolkata:20251101T133000
DTSTAMP:20260427T134912
CREATED:20251105T060023Z
LAST-MODIFIED:20251105T060023Z
UID:36877-1761991200-1762003800@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு ' - நூல் வெளியீட்டு நிகழ்வு - யாழ். பொது நூலகம்
DESCRIPTION:எழுநா வெளியீடாகிய\, பா. துவாரகன் அவர்களின் ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 01.11.2025 (சனிக்கிழமை) அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. \nமங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்\, திருமதி எழிலினி சித்தாந்தன் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை போதனா மருத்துவமனை அபிவிருத்தி உத்தியோகத்தர்\, திரு எஸ். சுதாகரன் வழங்க\, தலைமையுரையினை யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் சபை உறுப்பினர்\, திரு இ. பேரின்பநாயகம் வழங்கியிருந்தார். \nநிகழ்வின் தொடர்ச்சியாக நூல் அறிமுக உரையினை மருத்துவ கலாநிதியும் யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளருமாகிய திரு த. சத்தியமூர்த்தி அவர்கள் வழங்க\, சிறப்புரையினை அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான திரு ம. நிலாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலை மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி வெளியிட்டு வைக்க\, முதற்பிரதியை இலக்கியச் சோலை இ.து. குலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை ஊடகவியலாளர் த. பிரபாகரன்\, அலை ஆசிரியர் ஜேசுதாஸ்\, போதனா மருத்துவமனை கணக்காளர் காண்டீபன்\, கலைமுகம் ஆசிரியர் எமில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். \nஅதனைத் தொடர்ந்து நூல் மதிப்பீட்டுரையினை கோப்பாய் கல்வியற்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் (ஓய்வுநிலை) முருகேசு கெளரிகாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். மதிப்பீட்டுரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் பா. துவாரகன் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்\, பொதுமக்கள்\, நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/jaffna-medical-history-book-launch-event-jaffna-public-library/
LOCATION:Jaffna Public Library\, Clock Tower Road\, South\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251031T173000
DTEND;TZID=Asia/Kolkata:20251031T183000
DTSTAMP:20260427T134912
CREATED:20251104T035941Z
LAST-MODIFIED:20251104T040028Z
UID:36863-1761931800-1761935400@www.ezhunaonline.com
SUMMARY:‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட\, நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத் தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தில் 31.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. \nசித்திவிநாயகர் நூல் நிலைய இயக்குனர் சபைத் தலைவர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை ஆசிரியர் சி.ரமேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் சனசமூக நிலைய உறுப்பினர்கள்\, மாணவர்கள் \, பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/discussion-on-the-book-library-heritage-of-the-jaffna-peninsula-a-historical-quest-ezhalai-west-siddhivinayagar-community-centre/
LOCATION:Ezhalai West Siddhivinayagar Community Centre\, Ariyalai\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FT-2.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251029T170000
DTEND;TZID=Asia/Kolkata:20251029T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20251103T051809Z
LAST-MODIFIED:20251103T052619Z
UID:36844-1761757200-1761760800@www.ezhunaonline.com
SUMMARY:‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் (விநோதன் மண்டபம்) அறிவோர் ஒன்று கூடலில் 2025.10.29 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது. \nகொழும்புத் தமிழ்ச்சங்க நூலகர் ஜெயதேவன் சித்தார்த்தினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை எழுத்தாளர் எஸ்.ரகுநாத் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள்\, நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். \n 
URL:https://www.ezhunaonline.com/event/discussion-on-the-book-library-heritage-of-the-jaffna-peninsula-a-historical-quest-colombo-tamil-society/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/ft.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251018T103000
DTEND;TZID=Asia/Kolkata:20251018T130000
DTSTAMP:20260427T134912
CREATED:20251021T112720Z
LAST-MODIFIED:20251024T093528Z
UID:36725-1760783400-1760792400@www.ezhunaonline.com
SUMMARY:'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - நல்லூர்\, சிவகுரு ஆதீனம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட\, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர்\, சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 (சனிக்கிழமை) அன்று\, காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 வரை இடம்பெற்றது. \nகோபாலகிருஷ்ணன் பிரவீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு\, தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் ஆசியுரையினை வழங்க\, நூல் அறிமுக உரையினை சு.பிரவீன் அவர்கள் வழங்கியிருந்தார். மேலும்\, ‘யாழிலிருந்து மலையகம் வரை’ என்னும் தலைப்பில் குணகீதன் மதுராங்கி அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருந்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக ‘தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்கள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் இரா. சடகோபன் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார். \nஇந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள்\, மாணவர்கள்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/a-history-beyond-intrigues-and-conspiracies-book-launch-event-and-discussion-nallur-sivaguru-atheenam/
LOCATION:SIVAGURU ATHEENAM\, 692\, Point Pedro Road\, Nallur\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-21-at-16.51.16_b0e88a14.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251016T080000
DTEND;TZID=Asia/Kolkata:20251016T170000
DTSTAMP:20260427T134912
CREATED:20251016T122307Z
LAST-MODIFIED:20251016T122307Z
UID:36664-1760601600-1760634000@www.ezhunaonline.com
SUMMARY:மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு - நல்லூர் சிவகுரு ஆதீனம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. \nவேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க\, ‘ஏன் இந்தப் புத்தகத்தினை வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ணன் பிரவீன்ராஜ் அவர்கள் உரையாற்றியிருந்தார். நூலாசிரியரும் சித்த மருத்துவருமாகிய தியாகராஜா சுதர்மன் அவர்களால்\, அருகிவரும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக பெருகி வருகின்ற நோய்கள் தொடர்பில் சிறப்புரை வழங்கப்பட்டது. \nஇந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள்\, மாணவர்கள்\, சித்த மருத்துவத் துறையினர்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/unvarapadilla-undi-book-launch-event-nallur-sivaguru-aatheenam/
LOCATION:SIVAGURU ATHEENAM\, 692\, Point Pedro Road\, Nallur\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/FEATURE-2.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251014T110000
DTEND;TZID=Asia/Kolkata:20251014T120000
DTSTAMP:20260427T134912
CREATED:20251015T033823Z
LAST-MODIFIED:20251015T043107Z
UID:36625-1760439600-1760443200@www.ezhunaonline.com
SUMMARY:‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம்\, யாழ் பிராந்தியம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது\, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று\, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது. \nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. யேசுதாஸ் அவர்கள் “உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் உசாத்துணைக்காக இவ்வாறான ஆய்வு நூல்கள் வெளிவருவது அரிதானதொன்று\, சமூகத்திற்கு\, குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ் ஆய்வு நூல்களை எழுநா வெளியிடுவது பாராட்டப்பட வேண்டிய விடயம்” எனக் குறிப்பிட்டிருந்தார். \nமாணவர்கள்\, விரிவுரையாளர்கள்\, கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/north-eastern-regional-development-and-biodiversity-book-launch-event-sri-lanka-ocean-university-jaffna-region/
LOCATION:Ocean University\, 2nd Cross Street\, Jaffna\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/FEATURE-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251004T163000
DTEND;TZID=Asia/Kolkata:20251004T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20251010T041451Z
LAST-MODIFIED:20251010T044622Z
UID:36532-1759595400-1759600800@www.ezhunaonline.com
SUMMARY:சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வு - கொழும்பு தமிழ்ச்சங்கம்
DESCRIPTION:சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய\, எழுநாவின் வெளியீடான\, மலையக வரலாற்றைக் கூறும் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.10.2025 அன்று இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. \nஉட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் பெருந்தோட்ட வீடமைப்பு பிரிவின் முன்னாள் செயலாளர் திரு.எம். வாமதேவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார அலுவல்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் கலாநிதி ஹினிதும செனவி அவர்களும்\, சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி. ராஜலட்சுமி சேனாதிராஜா அவர்களும்\, செல்கொ கொன்டினெனாடல் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.எஸ். செல்வரட்ணம் அவர்களும்\, நாவல் நகர் கதிரேசன் கோவில் அறங்காவலர் முத்தையா பிள்ளை ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். \nவரவேற்புரையை திரு. ஹேமச்சந்திர பத்திரன நிகழ்த்த\, நூல் அறிமுக உரையை கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு.சு. முரளிதரன் நிகழத்தியிருந்தார். நூல் வெளியீட்டுக்கு இலக்கியப் புரவலர் திரு. ஹாஸிம் உமர் முன்னிலை வகிக்க\, நூலின் முதற்பிரதியை திரு. முத்தையா பிள்ளை ஸ்ரீகாந்தன் பெற்றுக்கொண்டார்.\nநூல் வெளியீட்டினைத் தொடர்ந்து\, நூலாய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பெ. சரவணகுமார் அவர்களும்\, கருத்துரைகளை மலையக ஆய்வாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமாகிய திரு.இ. தம்பையா அவர்களும்\, ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய செல்வி. நிவேதா ஜெகநாதன் அவர்களும் வழங்கி வைத்தனர். \nஇறுதி நிகழ்வுகளாகிய ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூலாசிரியர் இரா. சடகோபன் அவர்கள் வழங்கி வைத்தார். \nஇந்நிகழ்வில் எழுத்தாளர்கள்\, அரசியல் பிரமுகர்கள்\, ஊடகவியலாளர்கள்\, பேராசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர். \n 
URL:https://www.ezhunaonline.com/event/history-beyond-intrigues-and-conspiracies-book-launch-event-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/FEATURE.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250927T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250927T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20250929T053237Z
LAST-MODIFIED:20250929T053916Z
UID:36439-1758988800-1758996000@www.ezhunaonline.com
SUMMARY:ஆவணப்படத் திரையிடலும் புத்தக அறிமுக விழாவும்
DESCRIPTION:எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் \, செம்மணி தொடர்பான கவிதைகள் ‘வாசலிலே கிருஷாந்தி’ என்னும் நூலின் அறிமுக விழாவும் அச்சுவேலி தெற்கு\, கலாநிதி சனசமூக நிலையத்தில் 27.09.2025 அன்று வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் கலாநிதி சன சமூக நிலைய தலைவரும் ஆகிய பி.நேருஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. \nநிலையத்தின் செயலாளராகிய தர்ஷன் அவர்களால் நூல் பற்றிய மதிப்பீட்டுரை வழங்கப்பட்டது. புதுவை இரத்தினதுரையின் வரிகளாகிய \n‘காலாலுதைத்து நிலம்பிளந்து புதைகுழியிருந்து வெளிவருக\nபொய்யமைதி குலைந்து போகச்\nசாமப்பொழுதில் ஓலக்குரலெடுத்துப் பாடுக.\nசெம்மணி வீதியில்\nஉத்தியோகப் பற்றற்ற ஊரடங்கொன்றைப்\nபிரகடனம் செய்க.\nவருவோர் போவோர் எவரெனினும் வழிமறித்து\nகுருதிவழிய மூக்குடைத்துப்பொருதுக.\nபேயடிப்பதாய் ஊர்பேசிப் பதறட்டும்.\nஇது பேசாதிருக்கும் ஊருக்குப்\nபொருத்தமான தண்டனை.’ \nஇவ்வரிகள் தற்போது நடக்கும் புதைகுழி அகழ்வுகளை முற்கூட்டியே கணித்த வரிகளாக இருக்கின்றது எனக்குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்விற்கு சனசமூக நிலைய உறுப்பினர்கள்\, கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/documentary-screening-and-book-launch/
LOCATION:Atchuveli Kalanithi Sanasamuga Nilayam\, Atchuveli\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/09/FEATURE-14.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250907T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250907T120000
DTSTAMP:20260427T134912
CREATED:20250911T041947Z
LAST-MODIFIED:20250911T045838Z
UID:36274-1757239200-1757246400@www.ezhunaonline.com
SUMMARY:வாசலிலே கிருசாந்தி' செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும்.
DESCRIPTION:கிருசாந்தி குமாரசாமி அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தலின் ஒரு அங்கமான எழுநாவின் தொகுப்பில் வெளிவந்த ‘வாசலிலே கிருசாந்தி’ செம்மணி தொடர்பான கவிதைகள் புத்தக வெளியீடும் கவிதை வாசிப்பு நிகழ்வும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை செம்மணி அணையா விளக்குத் திடலில் நடைபெற்றது. \nஇந்நூலானது 47 கவிஞர்களின் 54 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. \nஇந்நிகழ்வில் நூலின் முதல்பிரதிகளை கிருசாந்தியின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இந்நூலில் இடம்பெற்ற கவிதைகள் நிகழ்வில் கலந்து கொண்டோரால் வாசிக்கப்பட்டன. \nபுகைப்படம் : குமணன் \n    
URL:https://www.ezhunaonline.com/event/vasalile-krisanthi-a-book-of-poems-related-to-semmani-was-released-and-a-poetry-reading-event-was-held/
LOCATION:Chemmani junction\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/09/FEATURE-.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250828T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250828T120000
DTSTAMP:20260427T134912
CREATED:20250902T035614Z
LAST-MODIFIED:20250902T041848Z
UID:36128-1756375200-1756382400@www.ezhunaonline.com
SUMMARY:'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' நூல் வெளியீட்டு விழா - விவசாயபீட கேட்போர் கூடம்\, கிளிநொச்சி வளாகம்
DESCRIPTION:எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது கடந்த 28.08.2025 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விவசாயபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. \nநிகழ்வின் தலைமை உரையினை விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் அவர்கள் வழங்க அணிந்துரையினை கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதிஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக நூல் வெளியீடு இடம்பெற்றது\, நூலின் முதற்பிரதியினை எழுத்தாளரின் சகோதரி திருமதி பூவையற்கரசி சுந்தரலிங்கம் அவர்கள் பெற சிறப்புப்பிரதிகளை அங்கிருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை காவேரிக்கலாமன்றத்தின் இயக்குனர் வண.பிதா வ.ஜோசுவா அவர்கள் ஆற்றியிருந்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ‘உயிர்ப்பல்வகைமையில் நிலைபேறான அபிவிருத்தியின் சாதக பாதக விளைவுகளை விளங்கிய நிலைபேறான இந்நூல் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது’\, இந்நூலின் இரண்டாவது பாகத்தினை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.மதிப்பீட்டு உரையினை தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய உரையினை இரணைமடு விவசாய சம்மேளனங்களின் தலைவர் திரு.சிவமோகன் அவர்கள் ஆற்றியிருந்தார். ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி S.J அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். \nஇந்நிகழ்விற்கு பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, மாணவர்கள்\, JICA திட்ட அலுவலர் \, விவசாய திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள்\, பல்கலைக்கழக கல்வி சார்\, கல்வி சாரா ஊழியர்கள்\, நண்பர்கள்\, உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். \nஇறுதி நிகழ்வான நன்றியுரையினை விவசாயபீடத்தின் பண்ணை முகாமையாளர் திரு.சிறிதரன் நிகழ்த்த விழா இனிதே நிறைவடைந்தது. \n 
URL:https://www.ezhunaonline.com/event/north-eastern-regional-development-and-biodiversity-book-launch-ceremony-agricultural-research-institute-auditorium-kilinochchi-campus/
LOCATION:Faculty of Agriculture\,University of Jaffna\, Ariviyal Nagar\, Kilinochi\, Northern\, 44000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/09/FEATURE.jpg
ORGANIZER;CN="KAVERI KALA MANRAM":MAILTO:revjosh.suthakkm@gmailkkm.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250726T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250726T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20250729T064301Z
LAST-MODIFIED:20250729T064636Z
UID:35735-1753545600-1753552800@www.ezhunaonline.com
SUMMARY:‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு - தளம் அமைப்பு\, திருகோணமலை
DESCRIPTION:எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று\, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. \nநிகழ்வின் தலைமை உரையினை தளம் அமைப்பின் இயக்குநர் வைத்தியர் ஹயக்கிரிவன் அவர்கள் வழங்க\, நூல் அறிமுக உரையினை தென்கயிலை ஆதீனம் சுவாமி அகத்திய அடிகளார் நிகழ்த்தியிருந்தார். மேலும்\, குறித்த நூலுக்கான மதிப்பீட்டுரையினை வைத்தியர் அ. ஸதீஸ்குமார் ஆற்றியிருந்தார். தொடர்ந்து\, ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார். \nதமிழர் தொன்மையின் மீது புதிய பார்வையினை வழங்கும் இவ்வாறான நூல்கள் காலத்தின் கட்டாயமாக இருப்பதனால்\, மேலும் இவைபோன்று தொடர்ந்தும் வெளியிடப்பட வேண்டும் என நிகழ்வில் கருத்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள்\, கல்வி ஆர்வலர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-event-for-tamils-in-the-brahmi-and-sinhala-inscriptions-of-sri-lanka-thalam-organization-trincomalee/
LOCATION:Thalam organization\, 1st Floor\, Periyakadai UC Complex\, Dockyard Road\, Trincomalee\, Eastern\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/FEATURE-10.jpg
ORGANIZER;CN="Thalam & Ezhuna":MAILTO:thalamjobcon@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250720T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250720T180000
DTSTAMP:20260427T134912
CREATED:20250723T081419Z
LAST-MODIFIED:20250724T045252Z
UID:35646-1753027200-1753034400@www.ezhunaonline.com
SUMMARY:'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் - சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்\, மட்டக்களப்பு
DESCRIPTION:கிழக்குப் பல்கலைக்கழகம்\, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய\, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது\, கடந்த யூலை மாதம்\, 20 ஆம் திகதி\, ஞாயிற்றுக்கிழமை\, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும்\, கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது. \nகுறித்த நூலினது அறிமுக உரையினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். தொடர்ந்து\, நூலிற்கான மதிப்பீட்டு உரைகளினை வித்தகர் கு. சண்முகம்\, சிரேஸ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன்\, ஆய்வாளர் துலாஞ்சனன்\, ஆய்வாளர் இத்திரிஸ் மற்றும் எழுத்தாளர் நீலாவணை இந்திரா முதலியோர் நிகழ்த்தியிருந்தனர். \nமேலும்\, நூலின் முதற்பிரதியினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் தாயார் பெற\, ஏனைய பிரதிகளை நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, மாணவர்கள்\, நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். \n   
URL:https://www.ezhunaonline.com/event/uthiyakkal-book-launch-event-and-discussion/
LOCATION:Swamy Vipulananda Institute of Aesthetic Studies\, Eastern University of Sri Lanka\, Kallady\, Batticaloa\, Eastern Province\, 30000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/FEATURE-9.jpg
ORGANIZER;CN="Eastern University%2C Sri Lanka Alumni Association (EUSLAA)":MAILTO:receptions@esn.ac.lk
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250621T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250621T170000
DTSTAMP:20260427T134912
CREATED:20250704T060246Z
LAST-MODIFIED:20250724T050141Z
UID:35161-1750521600-1750525200@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்'  ஆவணப்படத்திரையிடல் - Movie Club\, மட்டக்களப்பு
DESCRIPTION:‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club\, மட்டக்களப்பு \nஎழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று\, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ‘American Corner’ இல் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇத்திரையிடலில் பங்குபற்றியிருந்த பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட்\, “இது காலத்தின் தேவை கருதியதொரு ஆவணப்படம். இதன் காட்சியமைப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. குறித்த விடயம்சார் நூலினை எழுதியவரது நேர்காணலை உள்ளடக்கியிருந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. பலரும் இப்போது சுற்றாடல்சார் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனவும்\, “ஆவணப்படத்தின் நேரத்தினைச் சுருக்குவது\, சுவாரசியமாக்குவது\, தொழில்நுட்பத் தரம் போன்றன குறித்தும் சிந்திக்க வேண்டும். பெண்களது நேர்காணல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.” எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.
URL:https://www.ezhunaonline.com/event/neertha-kadal-documentary-screening/
LOCATION:American Corner\, Batticaloa\, 7A Saravana Rd\, Kallady 30000\, Batticaloa\, Eastern Province\, 30000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/Feature-3.jpg
ORGANIZER;CN="Movie Club":MAILTO:info@americancornerbatti.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250618T173000
DTEND;TZID=Asia/Kolkata:20250618T183000
DTSTAMP:20260427T134912
CREATED:20250703T052822Z
LAST-MODIFIED:20250724T050317Z
UID:35062-1750267800-1750271400@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல்  -  கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலானஆவணப்படமானது\, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 18.06.2025 அன்று\, புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது. \n    \n 
URL:https://www.ezhunaonline.com/event/neertha-kadal-documentary-screening-colombo-tamil-sangam/
LOCATION:Colombo Tamil Sangam Society Ltd. S.73 07\, Sangam Lane\, Colombo-06\, VVF8+38F Colombo Tamil Sangam\, Sangam Ln\, Colombo\, Colombo\, Western Province\, 00400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/Feature-2.jpg
ORGANIZER;CN="Colombo Tamil Sangam":MAILTO:Ilankai Tamil Sangam
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250617T090000
DTEND;TZID=Asia/Kolkata:20250626T220000
DTSTAMP:20260427T134912
CREATED:20250708T094758Z
LAST-MODIFIED:20250724T050443Z
UID:35292-1750150800-1750975200@www.ezhunaonline.com
SUMMARY:வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ - திரையிடல்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த யூன் மாதம் கிளிநொச்சி\, முல்லைத்தீவு\, அம்பாறை\, மட்டக்களப்பு\, யாழ்ப்பாணம்\, திருகோணமலை\, வவுனியா ஆகிய மாவட்டங்களில் திரையிடப்பட்டது. திரையிடலின் முதல் நிகழ்வாக\, இவ் ஆவணத் திரைப்படத்தை உருவாக்கிய\, அமரர் அ. இசைப்பிரியனுக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன. \nஇவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும்\, அதன் பின்னும்\, வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கின்றது.அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களையும்\, கண்ணீரையும்\, கோபத்தையும்\, ஏக்கத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கின்றது. மேலும் இது\, நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதோடு\, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. இந்நிகழ்வில் காணாமலாக்கப்பட்டோரது உறவுகள்\, செயற்பாட்டாளர்கள்\, முன்னாள் போராளிகள்\, ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-long-wait-for-justice-documentary-screening/
LOCATION:Association for Relatives of the Enforced Disappearances North & East Provinces\, North & East Provinces\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/feature-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250606T180000
DTEND;TZID=Asia/Kolkata:20250606T190000
DTSTAMP:20260427T134912
CREATED:20250611T041303Z
LAST-MODIFIED:20250611T041855Z
UID:34818-1749232800-1749236400@www.ezhunaonline.com
SUMMARY:“யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படத் திரையிடல் - கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்
DESCRIPTION:எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்’ என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில்\, கடந்த 06.06. 2025 அன்று\, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/water-documentary-screening-k-a-s-sathiyamanai-library/
LOCATION:கே.ஏ.எஸ். சத்தியமனை\, Sathiamanai Tholpuram West\, Chulipuram 40230\, Jaffna\, Northern Province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/06/S-feat-1-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250604T150000
DTEND;TZID=Asia/Kolkata:20250604T173000
DTSTAMP:20260427T134912
CREATED:20250606T044645Z
LAST-MODIFIED:20250606T061220Z
UID:34678-1749049200-1749058200@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621-1948)' நூல் வெளியீட்டு விழா - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
DESCRIPTION:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய\, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது\, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி\, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. \nகலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நூலின் அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து\, நகரப்புவியியல்சார் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்னுத்துரை பாலசுந்தரம்பிள்ளை அவர்களும்\, கலை வரலாறு நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் தாமோதரம்பிள்ளை சனாதனன் அவர்களும்\, பல்பரிமாண நோக்கில் படைப்பாளியும் அரசியல் விமர்சகருமான திரு. மகாதேவா நிலாந்தன் அவர்களும் மதிப்பீட்டுரைகளை ஆற்றியிருந்தார்கள். \nநூலாசிரியரான கட்டடக்கலைஞர் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களது ஏற்புரையை அடுத்து இடம்பெற்ற நன்றியுரையோடு நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது. குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, மாணவர்கள்\, ஊடக நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-yazhpana-nagaram/
LOCATION:University of Jaffna\, Ramanathan Rd\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/06/feat-event.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250528T123000
DTEND;TZID=Asia/Kolkata:20250528T133000
DTSTAMP:20260427T134912
CREATED:20250530T060327Z
LAST-MODIFIED:20250530T060457Z
UID:34562-1748435400-1748439000@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல் - வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, 28.05.2025 அன்று\, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.
URL:https://www.ezhunaonline.com/event/puthukkulam-documentary-screening/
LOCATION:VA/Puthukkulam Maha Vidyalayam\, Palampiddi - Thandikulam Rd\, Vavuniya\, Northern Province\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/feat-event.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250523T123000
DTEND;TZID=Asia/Kolkata:20250523T133000
DTSTAMP:20260427T134912
CREATED:20250526T053356Z
LAST-MODIFIED:20250526T054652Z
UID:34500-1748003400-1748007000@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல் - பூநகரி ஜெயபுரம் சமாசம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பூநகரி\, ஜெயபுரம் சமாசத்தில் 23.05.2025 அன்று\, பிற்பகல் 12.30 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇந்நிகழ்வில் பங்குபற்றிய நிரஞ்சன் பரிளா\,“குறிப்பாக மீன்பிடி சிறுதொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பூநகரியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் பல முன்னெடுத்திருந்தோம். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வு கிட்டவில்லை. இவ் ஆவணத்திரைப்படம் எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது“ என கருத்துத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது
URL:https://www.ezhunaonline.com/event/kilinochchi-neerththa-kadal-documentary-screening/
LOCATION:Jeyapuram Samaasham\, Jeyapuram\, Poonagari\, Jaffna\, Northern Province\, 42400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/Feat-26.jpg
ORGANIZER;CN="National Fisheries Cooperation Movement":MAILTO:nafsosl@gmail.com
END:VEVENT
END:VCALENDAR